Published : 15 Mar 2025 03:39 AM
Last Updated : 15 Mar 2025 03:39 AM
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெர்ற டிஎன்பிஎஸ்சி குருப்-1 மெயின் தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குருப்-1 பதவிகளில் (துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணிகள்) 90 காலியிடங்களை நிரப்புவதற்கான மெயின் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 10 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ள 190 பேரின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) காணலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT