Published : 03 Mar 2025 04:35 AM
Last Updated : 03 Mar 2025 04:35 AM

பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது: முறைகேடுகளை தடுக்க 4,500 பறக்கும் படைகள் அமைப்பு

கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்​களுக்கான பொதுத்​தேர்வு இன்று (மார்ச் 3) முதல் தொடங்​கு​கிறது. முறைகேடுகளை தடுக்க 4,470 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வெழுதும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, 11, 12-ம் வகுப்பு​களுக்கு பொதுத் தேர்வு நடத்​தப்​பட்டு வருகிறது. அதன்படி நடப்​பாண்​டுக்கான பிளஸ் 2 பொதுத்​தேர்வு இன்று (​மார்ச் 3) தொடங்கி மார்ச் 25-ம் தேதி வரை நடைபெறவுள்​ளது. முதல்​நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்​களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை மாநிலம் முழு​வதும் அமைக்​கப்​பட்​டுள்ள 3,316 தேர்வு மையங்​களில் 8 லட்சத்து 21,057 பேர் எழுதுகின்​றனர். இதில் 7,518 பள்ளி​களில் இருந்து 8 லட்சத்து 02,568 மாணவர்​கள், 18,344 தனித்​தேர்​வர்கள் மற்றும் 145 கைதி​களும் அடங்​கு​வர்.

பொதுத்​தேர்​வுக்கான அறைக் கண்காணிப்​பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள் ஈடுபடுத்​தப்பட உள்ளனர். மேலும், முறை​கேடுகளை தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்​கும் படைகள் அமைக்​கப்​பட்​டுள்ளன. அதேபோல், மாவட்ட ஆட்சி​யர், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமை​யிலும் சிறப்பு கண்காணிப்​புக் குழுக்கள் ஏற்படுத்​தப்​பட்​டுள்ளன. மேலும், சுமார் 154 வினாத்​தாள் கட்டுக்​காப்பு மையங்​களில் 24 மணி நேரம் ஆயுதம்
தாங்கிய காவல்​துறை அதிகாரிகள் பாது​காப்பு பணியில் ஈடுபடு​வார்​கள்.

இதுதவிர மாணவர்​களுக்​கும், ஆசிரியர்​களுக்​கும் பல்வேறு கடும் கட்டுப்​பாடுகள் விதிக்​கப்​பட்​டுள்ளன. தேர்​வறைக்​குள் செல்​போன் உட்பட மின்​சாதனம் கொண்டு வர தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. ஹால்​டிக்​கெட்​டில் உள்ள விதிகளை பின்​பற்றி மாணவர்கள் நடக்க வேண்​டும். விடைத்​தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்​டும். மேலும், எக்காரணம் கொண்​டும் கலர் பென்​சில், வேறு கலர் பேனா கொண்டு எழுதக்​கூடாது. அதேபோல், விடைத்​தாள்​களில் எவ்வித சிறப்பு குறி​யீடு, தேர்​வெண், பெயர் ஆகிய​வற்றை குறிப்​பிடக்​கூடாது. மாணவர் புகைப்​படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்​தாள், முதன்மை விடைத்​தாளுடன் இணைத்து வழங்​கப்​படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்ப​மிட வேண்டும்.

பொதுத்​தேர்​வில் ஆள்மாறாட்டம் செய்​வது, துண்​டுத்​தாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரி​யிடம் முறை​கேடாக நடந்து கொள்​ளுதல், விடைத்​தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்​களில் ஈடுபட்​டால் அந்த மாணவர் மீது விதி​களின்படி நடவடிக்கை எடுக்​கப்​படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்​தரமாக தேர்​வெழுத தடை விதிக்​கப்​படும். மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்கப்​படுத்த பள்ளி நிர்​வாகம் முயன்​றால் அதன் அங்கீ​காரம் ரத்து செய்​யப்​படும்.

இதுதவிர பொதுத்​தேர்வு குறித்து மாணவர்​கள், பெற்​றோர் புகார்கள் மற்றும் கருத்துகளை தெரி​வித்து பயன்பெற வசதியாக தேர்​வுக் கட்டுப்​பாட்டு அறை அமைக்​கப்​பட்​டுள்​ளது. தேர்வு நாட்​களில் தினமும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்​பாட்டு அறை செயல்​படும். இவற்றை 9498383075, 9498383076 ஆகிய எண்​களில் தொடர்பு ​கொள்​ளலாம். மேலும், பள்​ளிக்​கல்​வித் துறை​யின் 14,417 உதவி மை​யத்​தை​யும் தொடர்பு கொள்​ளலாம் என்று தேர்​வுத் துறை தெரிவித்துள்ளது.

முதல்வர் வாழ்த்து: பொதுத்​தேர்வு எழுதும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்​களுக்கு முதல்வர் மு.க.ஸ்​டா​லின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரி​வித்​துள்ளனர்.இதுகுறித்து முதல்வர் வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்தி: பிளஸ் வகுப்பு பொதுத்​தேர்வை 8 லட்சத்து 21,057 பேரும், பிளஸ் 1 தேர்வை 8 லட்சத்து 23,261 மாணவர்​களும் எழுதுகின்​றனர். கடந்த ஒராண்டாக மாணவர்கள் பொதுத்​தேர்வை எதிர்​கொள்ள ஆயத்​தமாக இருப்​பீர்​கள். இந்த தேர்​வுகள் உங்கள் உயர்​கல்விக்​கும், வாழ்க்கைக்​கும் முக்​கியமான அடித்​தள​மாகும். நீங்கள் தேர்வை மன அமைதி​யுடன், தன்னம்​பிக்கை​யுடன் எழுத வேண்​டும்.

நீங்கள் இதுவரை செய்த முயற்சி​கள், உங்கள் தேர்​வில் நல்ல முடிவுகளை தரும். உங்களின் உழைப்​பில் முழு நம்பிக்கை​யும் எனக்​குள்​ளது. பதற்​றமின்றி, உற்சாகத்​துடன் தேர்​வுகளை எதிர்​கொள்​ளுங்​கள். உங்கள் உடல்​நலம், தூக்​கம், உணவு மற்றும் மனநிலையை கவனித்​துக் கொள்​ளுங்​கள். உங்களது உயர்​ கல்விக்காக புது​மைப்​பெண், நான் முதல்வன் போன்ற பல்வேறு திட்​டங்களை இந்த அரசு செயல்​படுத்தி வருகிறது. நானும் தமிழக அரசும் உங்கள் பக்கத்​திலேயே எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்​போம். உங்கள் கடின உழைப்​புக்கு முழு வெற்றி கிடைக்க என் மனமார்ந்த வாழ்த்து​கள். இவ்வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது. இதேபோல், துணை முதல்வர் உதயநிதி ஸ்​டா​லின், பாமக தலை​வர் அன்​புமணி உள்​ளிட்ட தலை​வர்​களும்​ வாழ்​த்​துக்​களைத்​ தெரி​வித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x