Published : 31 Dec 2022 06:29 AM
Last Updated : 31 Dec 2022 06:29 AM

நயினார்கோவில் அருகே 2 ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு

ராமநாதபுரம்

நயினார்கோவில் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமையாசிரியர் மீதும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியர் மீதும் போலீஸார் போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிறுவயல் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகள் சிலருக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை அளிப்பதாகவும், அவருக்கு உடந்தையாக இருக்கும் ஆங்கில ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லைகளை வெளியில் சொல்லக் கூடாது என மாணவிகளை மிரட்டுவதாகவும் புகார் எழுந்தது.

இவ்விருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த 26-ம் தேதி ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸிடம் மனு அளித்தனர்.

இந்நிலையில் மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் தலைமையாசிரியர் ஜூலியஸ் ரவிச்சந்திரன்(56), அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஆங்கில ஆசிரியர் ஜெயபால் என்ற செந்தில்வேல்(36) ஆகியோர் மீது நயினார்கோவில் போலீஸார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள இருவரையும் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x