Published : 19 Nov 2025 07:22 AM
Last Updated : 19 Nov 2025 07:22 AM

கபாலீஸ்வரர் கோயிலில் சாமி கும்பிடும்போது மருத்துவ மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: அரசுத்துறை ஓட்டுநர் கைது

விஜயகு​மார்

சென்னை: ​கபாலீஸ்வரர் கோயிலில் சாமி கும்​பிடும் போது, மருத்துவ கல்​லூரி மாண​வி​யிடம் பாலியல் அத்​து​மீறலில் ஈடு​பட்ட அரசுத்துறை ஓட்​டுநர் கைது செய்​யப்​பட்​டார். பூந்​தமல்​லி, நசரத்​பேட்டை பகு​தி​யில் உள்ள தனி​யார் ஆயுர்​வேத கல்​லூரி​யில் 4-ம் ஆண்டு படித்து வரும் 21 வயது மருத்துவ மாணவி ஒரு​வர், கடந்த 16-ம் தேதி மயி​லாப்​பூரில் உள்ள கபாலீஸ்​வரர் கோயிலுக்கு வந்தார். அவரை 45 வயது மதிக்​கத்​தக்க ஆண் நபர் ஒரு​வர் பின் தொடர்ந்​தார்.

பின்​னர், அந்த பெண் சாமி தரிசனம் செய்து கொண்​டிருந்த போது, பின் தொடர்ந்து வந்த நபர் தவறான நோக்​கத்​தில் உரசி பாலியல் தொல்லை கொடுத்​தார். அதிர்ச்சி அடைந்த அந்த மாண​வி, சம்​பந்​தப்​பட்ட நபரை கண்​டித்​துள்​ளார்.

இதனால், கோபம் அடைந்த அந்த நபர் “இப்​படி​தான் செய்​வேன். உன்​னால் முடிந்​ததை செய்” என கூறிய​வாறு அங்​கிருந்து தப்​பிச் சென்​றார். வேதனை அடைந்த அந்த மாண​வி, இது தொடர்​பாக மயி​லாப்​பூர் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார்.

அதன்​படி, போலீ​ஸார் பார​திய நியாய சன்​ஹிதா சட்​டம் (பிஎன்​எஸ்) மற்​றும் தமிழ்​நாடு பெண்​கள் வன்​கொடுமை தடுப்​புச் சட்​டம் ஆகிய சட்​டப் பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிந்​து, மாண​வி​யிடம் பாலியல் அத்து மீறலில் ஈடு​பட்ட தமிழக அரசின் நகர்ப்புற மேம்பாட்டு துறை கார் ஓட்​டுந​ரான திரு​வல்​லிக்​கேணி​யைச் சேர்ந்த விஜயகு​மாரை (48) கைது​ செய்தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x