Published : 18 Nov 2025 07:04 AM
Last Updated : 18 Nov 2025 07:04 AM

சென்னை | நகை பட்டறையிலிருந்து 220 பவுன் திருடிய ஊழியர் உள்பட 4 பேர் கைது

கார்த்​திக் பேரா, பபான்​ராய், நாரயண் மைடி, கார்த்​திக் சந்திரா பிரதன்.

சென்னை: நகை பட்​டறையி​லிருந்து 220 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற, ஊழியர்​ உள்பட 4 பேர் ஒடி​சா​வில் பதுங்கி இருந்த போது கைது செய்​யப்​பட்​டனர். சென்​னை, பூந்​தமல்​லி நெடுஞ்​சாலை பகு​தி​யில்​ வசிப்​பவர்​ அரிஷ் (35). இவர்​, பழைய வண்​ணாரப்​பேட்​டை, முத்​தை​யா முதலி தெரு​வில்​ தங்​க நகை பட்​டறை நடத்​தி வரு​கிறார்​.

இவரது பட்​டறை​யில்​ வேலை செய்​து வந்​த, மேற்​கு​வங்​கம்​ மாநிலத்​தைச்​ சேர்ந்​த கார்த்​திக்​ பேரா (42) என்​பவரிடம்​, அரிஷ் கடந்​த 7-ம்​ தேதி தங்​ககட்​டிகள்​ மற்​றும்​ தங்​க நகைகளை கொடுத்​து, அதை உருக்​கி புதி​ய வடி​வில்​ நகைகளாக செய்​து தரு​மாறு கூறி​யுள்​ளார்​.

இதையடுத்​து, கார்த்​திக் பேரா கடந்த 10-ம் தேதி புதி​தாக தயார் செய்த தங்க நகைகளை கொடுத்​துள்​ளார். அதில், 200 பவுன் தங்க நகைகளை திரும்ப கொடுக்​காமல் திருடி​விட்டு நண்​பர்​களு​டன் தலைமறை​வா​னார். அதிர்ச்சி அடைந்த அரிஷ், இதுதொடர்​பாக, கொருக்​குப்​பேட்டை காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார்.

அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து கார்த்​திக் பேரா, அவரது நண்​பர்​களான கூட்​டாளி​கள், அதே மாநிலத்​தைச் சேர்ந்த பபான்​ராய் (29), நாரயண்​மைடி (19) மற்​றும் திருட்டு நகைகளை வாங்கி வைத்​திருந்த ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த கார்த்​திக் சந்திரா பிரதன் (42) ஆகிய 4 பேரை​யும் ஒடி​சா​வில் பதுங்கி இருந்த போது கைது செய்​தனர். அவர்​களிட​மிருந்து 258 கிராம் தங்க நகைகள் மீட்​கப்​பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x