Published : 17 Nov 2025 06:26 AM
Last Updated : 17 Nov 2025 06:26 AM

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு போதைப் பொருள் கடத்திய 2 பேர் கைது

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதானவர்கள்.

சென்னை: கீழ்ப்​பாக்​கம் போலீ​ஸார் நேற்று முன்​தினம் மதி​யம், கீழ்ப்​பாக்​கம், வாசு தெரு​வில் ரோந்​துப் பணி​யில் இருந்​தனர். அப்​போது அங்கு சந்​தேகத்​துக்​கிட​மான முறை​யில் நின்று கொண்​டிருந்த 2 நபர்​களை விசா​ரித்​தனர். அவர்​கள் முன்​னுக்​குப்​பின் முரணாக பதில் அளித்​த​தால் அவர்​களது உடைமை​களை சோதனை செய்​த​போது, மெத்​தம்​பெட்​டமைன் எனும் போதைப்​பொருளை மறைத்து வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.

அதை பறி​முதல் செய்த போலீ​ஸார் போதைப் பொருள் வைத்​திருந்த ஆவடியைச் சேர்ந்த உஸ்​மான் (23), அதே பகு​தி​யைச் சேர்ந்த அவரது கூட்​டாளி பிர​வீன் (21) ஆகிய இரு​வரை​யும் கைது செய்​தனர். விசா​ரணை​யில் கைது செய்​யப்​பட்ட இரு​வரும் மெத்​தம்​பெட்​டமைனை பெங்​களூரு​விலிருந்து வாங்கி வந்து சென்​னை​யில் விற்​பனை செய்​வதற்​காக வைத்​திருந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து இரு​வரும் சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x