Published : 17 Nov 2025 06:10 AM
Last Updated : 17 Nov 2025 06:10 AM

அண்ணா பல்கலை.யில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.5 கோடி மோசடி: முன்னாள் துணைவேந்தர், மனைவி மீது வழக்குப் பதிவு

கலாநிதி

சென்னை: அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்​த​தாக முன்​னாள் துணைவேந்​தர் கலாநி​தி, அவரது மனைவி ராஜலட்​சுமி மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். செங்​கல்​பட்டு மாவட்​டம், திருப்​போரூர் அருகே உள்ள பையனூரைச் சேர்ந்​தவர் தனசேகர்.

இவருக்கு மயி​லாப்​பூர் கிழக்கு அபி​ராமபுரத்​தில் வசிக்​கும் அண்ணா பல்​கலைக்​கழகத்​தின் முன்​னாள் துணைவேந்​தர் கலாநிதி குடும்​பத்​துடன் நட்பு ஏற்பட்​டது. இதைப் பயன்​படுத்தி தனசேகர், தனது 2 மகள்​களுக்​கும் அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் வேலை வாங்​கித் தரும்​படி கேட்​டுள்​ளார்.

அதற்கு கலாநிதி ரூ.40 லட்​சம் கேட்டு பெற்​ற​தாகக் கூறப்​படு​கிறது. மேலும் தனசேகர் தனக்​குத் தெரிந்த வேறு சிலருக்​கும் அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் வேலை பெற்​றுத் தரும்​படி கலாநி​தி​யிடம் மொத்​தம் ரூ.2.5 கோடி வரை கொடுத்​த​தாகக் கூறப்​படு​கிறது. பணத்தை பெற்​றுக் கொண்ட கலாநிதி யாருக்​கும் வேலை வாங்கி கொடுக்​க​வில்​லை.

அதிர்ச்சி அடைந்த தனசேகர், கொடுத்த பணத்தை திருப்​பிக் கேட்​டுள்​ளார். ஆனால் அவர் பணத்தை திருப்​பிக் கொடுக்​காமல் இழுத்​தடித்​த​தாக தெரி​கிறது. சில நாட்​களுக்கு பின்​னர் பணத்​துக்கு ஈடாக நிலப்​பத்​திரம் ஒன்றை கொடுத்​தா​ராம். பின்​னர் அந்த நிலப்​பத்​திரம் காணா​மல் போன​தாக மோசடி புகாரை கலாநிதி காவல் துறை​யில் அளித்​த​தாக கூறப்​படு​கிறது.

இதனால் தான் ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்த தனசேகர், போலீ​ஸில் புகார் செய்​தார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்​லை. மேலும் இது தொடர்​பாக தலை​மைச் செயல​கத்​தி​லும் தனசேகர் மனு அளித்​தார். ஆனால் அதன் பின்​னரும் நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்​லை.

இதையடுத்து தனசேகர், உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்​தர​விடக் கோரி நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர்ந்​தார். மனுவை விசா​ரித்த சைதாப்​பேட்டை நீதி​மன்​றம், தனசேகர் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மயி​லாப்​பூர் போலீ​ஸாருக்கு அண்​மை​யில் உத்​தர​விட்​டது.

இதையடுத்து மயி​லாப்​பூர் போலீ​ஸார், கலாநிதி மற்​றும் மோசடிக்கு உடந்​தை​யாக இருந்​த​தாக அவரது மனைவி ராஜலட்​சுமி மீது மோசடி, கூட்​டுச் சதி, நம்​பிக்கை மோசடி உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்​தனர். இதையடுத்​து இரு​வரிட​மும்​ விரை​வில்​ வி​சா​ரணை நடை​பெறவுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x