Published : 14 Nov 2025 06:05 AM
Last Updated : 14 Nov 2025 06:05 AM

சென்னை | கைலாய யாத்திரை அழைத்துச் செல்வதாக 38 பேரிடம் ரூ.12.7 லட்சம் மோசடி: பெண் உட்பட 2 பேர் கைது

சுவாதீஸ்​வரன், செல்வி

சென்னை: கைலாய யாத்​திரைக்கு அழைத்​துச் செல்​வ​தாக 38 பேரிடம் ரூ.12.7 லட்​சம் மோசடி செய்த வழக்​கில் பெண் உள்பட இருவர் கைது செய்​யப்​பட்​டனர். திரு​வல்​லிக்​கேணி வாத்​தி​யார் தெரு​வைச் சேர்ந்​தவர் பெரு​மாள் (54). இவருக்கு கைலாய மலைக்குச் செல்ல வேண்​டும் என்​பது நீண்​ட​நாள் ஆசை.

இது தொடர்​பாக, தனக்கு அறி​முக​மான திரு​வல்​லிக்​கேணி, திரு​வேட்​டீஸ்​வரர் கோயி​லில் தூய்​மைப் பணி செய்து வந்த ராயப்பேட்டையைச் சேர்ந்த செல்வி (58) என்​பவரிடம் தெரி​வித்​துள்​ளார்.

அவர், தனக்கு தெரிந்த அம்​பத்​தூரில் வசிக்​கும் சுவாதீஸ்வரன் (34) கைலாய யாத்​திரை அழைத்​துச் செல்​கிறார் என தெரி​வித்​துள்​ளார். இதை நம்​பிய பெரு​மாள் உள்​ளிட்ட 38 பேர் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை ரூ.12.7 லட்சத்தை சுவாதீஸ்​வரனிடம் கொடுத்​துள்​ளனர்.

பாதிக்கப்பட்டவர் புகார்: ஆனால், உறு​தி​யளித்​த​படி கைலா​யம் அழைத்​துச் செல்​ல​வில்​லை. ஏமாற்​றப்​பட்ட 38 பேரும் ஜாம்​பஜார் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தனர். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து பண மோசடி​யில் ஈடு​பட்ட சுவாதீஸ்​வரன், உடந்​தை​யாக இருந்த செல்வி ஆகிய இரு​வரை​யும் கைது செய்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x