Published : 14 Nov 2025 07:37 AM
Last Updated : 14 Nov 2025 07:37 AM

சென்னை | ஏலச்சீட்டு நடத்தி தொழிலதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: சிட்பண்ட் நிறுவன உரிமையாளர் கைது

ரவி

சென்னை: தொழில் அதிபரிடம் ஏலச்​சீட்டு மூலம் ரூ.2 கோடி மோசடி செய்த சிட்​பண்ட் நிறுவன உரிமை​யாளர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். தஞ்​சாவூரைச் சேர்ந்​தவர் ஜெயச்​சந்​திரன் (63). இவர் மனை​வி, தம்​பி​யுடன் சென்னை ராயப்​பேட்​டை​யில் மருந்து மொத்த விற்​பனை நிறு​வனம் நடத்தி வரு​கிறார்.

இவர் பாரி​முனை​யில் சிட்​பண்ட் நிறு​வனம் நடத்தி வந்த புதுச்​சேரியைச் சேர்ந்த சப்​பாணி பிள்ளை என்ற ரவி (57) என்​பவரிடம் பல்​வேறு தவணை​களில் ரூ.2 கோடி கட்​டி​னார். அதற்கு ரூ.2.34 கோடி கிடைக்​கும் என்று ரவி கூறியதுடன், அந்த தொகைக்​கான காசோலைகளை​யும் கொடுத்​தார்.

ஆனால் பணம் இல்​லாமல் காசோலை திரும்ப வந்​தது. இதனால் ஏமாற்​றம் அடைந்த ஜெயச்​சந்​திரன், இது தொடர்​பாக சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் தெரி​வித்​தார்.

இதுகுறித்​து, மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் விசா​ரிக்க காவல் ஆணை​யர் உத்​தர​விட்​டார். அதன்​படி, அப்​பிரிவு போலீ​ஸார் விசா​ரித்​தனர். இதில் மோசடி நடை​பெற்​றது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்து இந்த மோசடி​யில் ஈடு​பட்ட ரவியை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்து சிறை​யில்​ அடைத்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x