Published : 12 Nov 2025 04:45 AM
Last Updated : 12 Nov 2025 04:45 AM

சென்னை | வெளிநாட்டு வேலை ஆசை காட்டி மோசடி செய்தவர் கைது

சென்னை: அஜர்​பைஜான் நாட்​டில் வேலை வாங்​கித் தரு​வ​தாக, பண மோசடி​யில் ஈடு​பட்ட இளைஞர் கைது செய்​யப்​பட்​டார். திண்டுக்​கல் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர் குரு​மூர்த்தி (30). இவர், வெளிநாட்​டில் பணி செய்ய வேலை தேடிக் கொண்​டிருந்​தார். அப்​போது, வெளி​நாட்டு வேலை தொடர்​பாக, சமூக வலை​தளத்​தில் வந்த விளம்​பரம் ஒன்றை பார்த்​து, அதில் குறிப்​பிடப்​பட்​டிருந்த செல்​போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசி​னார்.

போலி விசா, பணியாணை எதிர் முனை​யில் பேசிய நபர், தான் தூத்​துக்​குடி மாவட்​டம், எட்​டையபுரத்​தைச் சேர்ந்த சுடலை குமார் (38) என்​றும், தன்​னால் அஜர்​பைஜான் நாட்​டில் வேலை வாங்​கித் தர முடி​யும் எனவும் கூறி, சேவை கட்​ட​ண​மாக ரூ.1.5 லட்​சம் பெற்​றுக் கொண்​டார். இதையடுத்​து, அந்​நாட்​டுக்​குச் செல்ல தேவை​யான விசா மற்​றும் வேலைக்​கான ஆணை​களை கொடுத்​துள்​ளார்.

அதை பெற்​றுக் கொண்​டு, சென்​னையி​லிருந்து டெல்லி சென்று அங்​கிருந்து குரு​மூர்த்தி அஜர்​பைஜான் செல்ல முயன்​றார். அப்​போது, டெல்லி விமான நிலை​யத்​தில் குரூமூர்த்​தி​யின் ஆவணங்​களை பரிசோ​தித்த அதி​காரி​கள் விசா மற்​றும் பணிநியமன ஆணை என அனைத்​தும் போலி என கண்​டறிந்து அவரை திருப்பி அனுப்​பினர்.

இதே​போல், சுடலை குமா​ரால் பாதிக்​கப்​பட்ட மேலும் 3 பேர் அங்கு நின்று கொண்​டிருந்​தனர். மொத்​தம் ரூ.6 லட்​சம் கொடுத்​து, தாங்​கள் ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்த 4 பேரும் சென்னை வந்து சென்னை விமான நிலை​யம் காவல் நிலை​யத்​தில் புகார் கொடுத்​தனர். இதையடுத்​து, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில், புகார் உண்மை என தெரிய வந்​த​தால், தலைமறை​வாக இருந்த சுடலை குமாரை கைது செய்​தனர். இவ்​வழக்​கில் தொடர்​புடைய மேலும்​ சிலரை போலீ​ஸார்​ தேடி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x