Published : 12 Nov 2025 12:36 AM
Last Updated : 12 Nov 2025 12:36 AM

கடலூரில் தேர்தல் முன்விரோதம் காரணமாக ஊராட்சி தலைவரைக் கொன்ற 10 பேருக்கு ஆயுள்

கடலூர் மாவட்டம் கீழ்அருங்குணம் ஊராட்சித் தலைவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 10 பேரையும், கடலூர் மத்திய சிறைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

கடலூர்: கடலூர் மாவட்​டத்​தில் ஊராட்சித் தலை​வர் கொலையான வழக்​கில் 10 பேருக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டது.

கடலூர் மாவட்​டம் கீழ்அருங்​குணம் ஊராட்​சித் தலை​வ​ராக இருந்​தவர் சுபாஷ். இவர், விடுதலைச் சிறுத்​தைகள் கட்​சி​யின் அண்​ணாகி​ராமம் ஒன்​றியச் செயலா​ள​ராக​வும் பொறுப்பு வகித்து வந்​தார். இவருக்​கும், ஊராட்​சித் தலை​வர் பதவிக்கு போட்​டி​யிட்ட பெண் ஒரு​வரின் கணவரான தாமோதரன் என்​பவருக்​கும் தேர்​தல் தொடர்​பாக முன்​விரோதம் இருந்து வந்​தது. இரு தரப்​பினரும் ஒரே சமூகத்​தைச் சேர்ந்​தவர்​கள். எனினும், தேர்​தல் பிரச்​சினை​யால் அவர்​களுக்குள் பகை அதி​க​மானது.

இந்​நிலை​யில், 2020 ஜூலை 19-ம் தேதி சுபாஷ் ஒரு கும்​பலால் வெட்டிப் படு​கொலை செய்​யப்​பட்​டார். இதுகுறித்து நெல்​லிக்​குப்​பம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து, தாமோதரன், அவரது மகன் வில்​பார், ராஜதுரை, கவியரசன், சுபக​னேஷ், தமிழ்​வாணன், மணி​மாறன், தர்​ம​ராஜ், தினேஷ்கு​மார், பக்​கிரிசாமி, மணிவண்​ணன், வெங்​க​டாபதி ஆகிய 12 பேரை கைது செய்​தனர்.

இந்த வழக்கு கடலூர் மாவட்டமுதலா​வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. விசா​ரணை​யின்​போது வெங்​க​டாபதி இறந்து விட்​டார். பக்​கிரி​சாமி வழக்​கில் இருந்து விடுவிக்​கப்​பட்​டார். மற்ற 10 பேருக்​கும் ஆயுள் சிறை தண்டனை​யும், தலா ரூ.2 ஆயிரம்அபராத​மும் விதித்து நீதிபதிசரஸ்​வதி நேற்று தீர்ப்​பளித்​தார். தொடர்ந்​து, 10 பேரும் கடலூர் மத்​தி​ய சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x