Published : 10 Nov 2025 06:34 AM
Last Updated : 10 Nov 2025 06:34 AM

வண்டலூர், சேலையூர் பகுதிகளில் தொடர் திருட்டால் மக்கள் அச்சம்

கோப்புப் படம்

தாம்பரம்: வண்​டலூர் சிங்​காரத்​தோட்​டம், பிர​தான சாலையை சேர்ந்​தவர் சந்​திரசேகர் (65). அதே பகு​தி​யில், ரியல் எஸ்​டேட் அலு​வல​கம் நடத்தி வரு​கிறார். இந்​நிலை​யில் நேற்​று​முன்​தினம் இரவு அலு​வல​கத்​தின் கதவை திறந்து வைத்​த​படி அயர்ந்து தூங்​கி​யுள்​ளார்.

பின்​னர், கண் விழித்து பார்த்த போது, சந்​திரசேகர் அலு​வல​கத்​தில் வைக்​கப்​பட்​டிருந்த ஒரு லேப்​டாப், 2 மொபைல் போன் மற்​றும் ரூ.40 ஆயிரம் பணம் காணா​மல் போயிருப்​பது தெரிந்து அதிர்ச்​சி​யடைந்​தார்.

இதற்கிடையே, அன்று நள்​ளிரவு வண்​டலூர், ஓட்​டேரி பகு​தி​யில் 2 மர்ம நபர்​கள் ஒரு வீட்​டின் கதவை உடைத்து திருட முயற்​சித்​துள்​ளனர். கதவு உடைக்​கப்​படும் சத்​தம் கேட்​டு, அக்​கம்​பக்​கத்​தினர் கூச்​சல் போட்​ட​தால், மர்ம நபர்​கள் அங்​கிருந்து தப்​பினர். இந்த இரு சம்​பவங்​கள் குறித்​தும், ஓட்​டேரி போலீ​ஸார் வழக்கு பதிவு செய்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இதே​போல், நன்​மங்​கலம், பெரு​மாள் நகர் 3-வது தெருவை சேர்ந்​தவர் ரங்​க​ராஜன் (50). அதே பகு​தி​யில் ஸ்டுடியோ கடை நடத்தி வரு​கிறார். இவரது மனைவி உஷா (43) கழுத்​தில் அணிந்திருந்த மூன்​றரை பவுன் தங்​கச் சங்​கி​லியை அடகு கடை​யில் வைப்​ப​தற்​காக, கழற்றி நேற்​று​முன்​தினம் பூஜை அறை​யில் வைத்​துள்​ளார். மாலை​யில் பார்த்த போது தங்​கச் சங்​கி​லியை காண​வில்​லை. இது தொடர்​பாக, மேட​வாக்​கம் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்​ளார்.

மேற்​கு​வங்க மாநிலத்தை சேர்ந்​தவர் ஆசிஷ் சந்த்ரா கரய் (30). கூலி தொழிலா​ளி​யான இவர், தாம்​பரம் அருகே சேலை​யூர், சந்​தோஷ்புரத்​தில் தங்​கி, கட்​டு​மான பணி​யில் ஈடுப்​பட்டு வந்​தார். இவர்​கள் தங்​கி​யிருந்த இடத்​திற்கு பைக்​கில் வந்த மர்ம நபர்​கள் 3 பேர் நேற்று முன்​தினம் இரவு துங்கி கொண்​டிருந்த ஆசிஷ் மற்​றும் அவரது நண்​பரை எழுப்பி கத்​தியை காட்டி மிரட்டி ரூ.3 ஆயிரம் பணம், 2 செல்​போன், வெள்ளி செயின் ஆகிய​வற்றை பறித்து கொண்டு தலைமறை​வா​னார். இதுகுறித்து சேலை​யூர் போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

படப்​பை, அண்ணா நகரில் பருப்பு விற்​பனை செய்​யும் கடை உள்​ளது. நேற்று இரவு இந்த கடை​யின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்​கள் கல்லா பெட்​டி​யில் இருந்த ரூ.7 ஆயிரத்தை திருடி சென்​றனர். இதுகுறித்​து, கடை உரிமை​யாளர் மது​மிதா படப்பை காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். இதனிடையே, கடந்த 2 நாட்​களாக தாம்​பரம் மாநகர காவல் ஆணை​ய​ராக எல்​லை​யில், 10-க்​கும் மேற்​பட்ட இடங்​களில் கொள்ளை சம்​பவம் நடை​பெற்​றுள்​ளது. இதனால்​ பொது​மக்​கள்​ அச்​சமடைந்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x