Published : 09 Nov 2025 09:36 AM
Last Updated : 09 Nov 2025 09:36 AM

திருடன் - போலீஸ் ஆட்டம் விளையாடி மாமியாரை கொன்ற மருமகள் கைது

கொலை செய்யப்பட்ட கனக மகாலட்சுமி, கொலையாளி லலிதா

விசாகப்பட்டினம்: ஆந்​தி​ரா​வின் விசாகப்​பட்​டினம், அப்​பண்​ண​பாளை​யம் வர்​ஷிணி குடி​யிருப்பு பகு​தியை சேர்ந்​தவர் சுப்​பிரமணிய சர்​மா. இவரது மனைவி லலி​தா. இவர்​களுக்கு இரண்டு பிள்​ளை​கள். இவர்​களு​டன் சுப்​பிரமணிய சர்​மா​வின் தாயார் கனக மகாலட்​சுமி (66) வசித்து வந்​தார்.

கடந்த வெள்​ளிக்​கிழமை சமையல் அறையில் மின் கசிவு ஏற்​பட்​ட​தில் தீயில் மாமி​யார் கனக மகாலட்​சுமி சிக்​கிக் கொண்​டதாக லலிதா அலறினார். தகவல் அறிந்து பொது​மக்​கள் தீயை அணைத்து கனக மகாலட்​சுமியை மீட்​டனர். ஆனால் அவர் உயிரிழந்தார். போலீஸ் விசாரணையில் லலிதா கொலை செய்தது தெரியவந்தது. போலீ​ஸாரிடம் லலிதா அளித்த வாக்​குமூலத்​தில் கூறி​யிருப்​ப​தாவது:

மாமி​யாருடன் வசிப்​பதை நான் விரும்​ப​வில்​லை. யூ-டியூப்​பில் ‘மு​தி​யோரை கொலை செய்​வது எப்​படி, என்று ஆய்வு செய்​தேன். அதன்​படி, மாமி​யாரிடம் அன்​பாக பழக தொடங்​கினேன்.

சம்​பவத்​தன்று திருடன் - போலீஸ் ஆட்​டம் விளை​யாடலாம் என்று மாமி​யாரை அழைத்​தேன். அதற்கு அவர் ஒப்​புக்​கொண்​டார். அவரது கண்​களை ஒரு துணி​யால் கட்​டினேன். கைகளை​யும் கட்​டினேன். இதற்கு முன்​பாக பெட்​ரோலை தயா​ராக வைத்து இருந்​தேன்.

சமையல் அறைக்கு அவர் வந்​ததும் பெட்​ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்​தினேன். அவர் அலறிய​போது கீழே தள்​ளி​விட்​டேன். அவரது அலறல் வெளியே கேட்​காமல் இருக்க டிவியை அதிக சத்​த​மாக வைத்து சீரியல் பார்த்​தேன். பின்​னர் ஸ்விட்ச் போர்டு மீது பெட்​ரோலை ஊற்றி கொளுத்​தினேன். இதற்​குள் மாமி​யார் தீயில் கருகி இறந்​து​விட்​டார். ஆனால், வீட்​டில் இருந்து புகை வந்​த​தால் அனை​வரும் வந்து விட்​டனர். அவர்​களை நம்ப வைக்க மின்​கசிவு என நாடகம் ஆடினேன். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்​ளார். இதனை தொடர்ந்து மரு​மகள்​ லலி​தாவை போலீ​ஸார்​ கைது செய்​து சிறை​யில்​ அடைத்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x