Published : 09 Nov 2025 12:32 AM
Last Updated : 09 Nov 2025 12:32 AM

திருச்சி மத்திய சிறையில் கைதிகளிடையே மோதல்: இருவர் காயம்; 13 பேர் மீது வழக்கு

திருச்சி: ​திருச்சி மத்​திய சிறை​யில் தண்​டனைக் கைதி​கள், விசா​ரணைக் கைதி​கள் என 1,500-க்​கும் அதி​க​மானோர் அடைக்​கப்​பட்​டுள்​ளனர். சிறைத் துறை டிஐஜி (பொ) பழனி மற்​றும் சிறை அதி​காரி​கள் நேற்று முன்​தினம் கைதி​களிடம் குறை​களைக் கேட்​டனர்.

அப்​போது, 14-வது பிளாக்​கில் அடைக்​கப்​பட்​டுள்ள சில கைதி​கள், தங்​களை அவம​திக்​கும் வகை​யில் நடந்து கொள்​வ​தாக 12-வது பிளாக்​கில் அடைக்​கப்​பட்​டுள்ள சில கைதி​கள் குற்​றம்​சாட்​டினர். இதனால் அவர்​களுக்​கிடையே கடும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டு, கைகலப்​பாக மாறி, ஒரு​வரையொரு​வர் தாக்​கிக் கொண்​டனர்.

இதில், திருநெல்​வேலி மாவட்​டம் நாங்​குநேரியை சேர்ந்த சிவசுப்​பு(25), ராம​நாத​புரம் மாவட்​டம் மரவட்டி வலசையை சேர்ந்த தேவ​தாசன்​(33) ஆகியோர் காயமடைந்​தனர்.

இதுகுறித்து சிறைத்​துறை அதி​காரி விவேக் அளித்த புகாரின்​பேரில், அரியலூர் மாவட்​டம் செல்​தான்​காட்டை சேர்ந்த தனுஷ்கு​மார் (19), மயி​லாடு​துறை மாவட்​டம் திருஇந்​தளூரை சேர்ந்த சந்​திரமவுலி (26), மகா​விஷ்ணு (28), சந்​திரமோகன் (30), நாக​ராஜ் (32), செம்​ப​னார்​கோ​வில் சதீஷ் (28), சிவகங்கை மாவட்​டம் டி.புத்​தூர் ராஜ​பாண்டி (20), திருநெல்​வேலி மாவட்​டம் நாங்​குநேரி சுரேஷ் (27), தூத்​துக்​குடி மோகன்​கு​மார் (20) மற்​றும் காயமடைந்த 2 பேர் என இருதரப்பை சேர்ந்த 13 பேர் மீது கே.கே. நகர் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர். தொடர்ந்து வி​சா​ரணை நடத்தப்பட்டு வரு​கி​றது​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x