Published : 09 Nov 2025 12:41 AM
Last Updated : 09 Nov 2025 12:41 AM

மயிலாடுதுறை அருகே பள்ளி பேருந்தை கல்வீசி தாக்கிய போதை கும்பல்; இளைஞர் கைது - மேலும் 2 பேரை பிடிக்க தனிப்படை அமைப்பு

தாமரைச்செல்வன்

மயிலாடுதுறை: மயி​லாடு​துறை அருகே மது​போதை​யில் தனி​யார் பள்​ளிப் பேருந்தை வழிமறித்​து, கல்​வீசி தாக்​கிய இளைஞர் நேற்று கைது செய்​யப்​பட்​டார். மேலும் 2 பேரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

புதுச்​சேரி மாநிலம் காரைக்​கால் மாவட்​டம் பூவம் பகு​தி​யில் உள்ள தனி​யார் பள்​ளிப் பேருந்து ஒன்று நேற்று முன்​தினம் மாலை குழந்​தைகளை ஏற்​றிக்​கொண்​டு, அவர​வர் வீடு​களில் இறக்​கி​விடப் புறப்​பட்​டது. மயி​லாடு​துறை மாவட்​டம் தரங்​கம்​பாடியை அடுத்த அரசலங்​குடி- எடுத்​துக்​கட்டி சாலை​யில் மாங்​குடி என்ற இடத்​தில் பேருந்து வந்​த​போது, அங்கு மது​போதை​யில் நின்று கொண்​டிருந்த சில இளைஞர்​கள் பேருந்தை வழிமறித்து கல்​வீசி தாக்​கினர். மேலும், பேருந்​தில் இருந்த வைபர் போன்​றவற்றை உடைத்து சேதப்​படுத்​தினர். இதைப் பார்த்து பேருந்​தில் இருந்த குழந்​தைகள் பயந்​து​
போய் அலறி​யுள்​ளனர். இது தொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலானது.

6 பிரிவு​களின் கீழ் வழக்​கு: இதையடுத்​து, மயி​லாடு​துறை மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் ஸ்டா​லின் உத்​தர​வின்​பேரில், பள்​ளிப் பேருந்​தின் மீது கல்​வீசி சேதப்​படுத்​தி​யது, கொலை மிரட்​டல் விடுத்​தது உள்​ளிட்ட 6 பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிவு செய்த போலீ​ஸார், அந்த கும்​பலைத் தேடி வந்​தனர்.

விசா​ரணை​யில், அவர்​கள் எடுத்​துக்​கட்டி காளி​யம்​மன் கோவில் தெரு​வைச் சேர்ந்த ஆகாஷ், கபிலன், எடுத்​துக்​கட்டி பூதனூர் பெரு​வேலி பகு​தி​யைச் சேர்ந்த தாமரைச்​செல்​வன்​(23) என்​பது தெரிய​வந்​தது. இதில் தாமரைச்​செல்​வனை நேற்று கைது செய்த போலீ​ஸார், மற்ற இரு​வரை தேடி வரு​கின்​றனர். அவர்​களைப் பிடிக்க சீர்​காழி துணை காவல் கண்​காணிப்​பாளர் அண்​ணாதுரை, பொறை​யாறு காவல் ஆய்​வாளர் அண்​ணாதுரை, தனிப்​படை உதவி ஆய்​வாளர் அறிவழகன் ஆகியோர் தலை​மை​யில் 3 தனிப்​படைகள்​ அமைக்​கப்​பட்​டுள்​ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x