Published : 08 Nov 2025 07:04 AM
Last Updated : 08 Nov 2025 07:04 AM

மெரினாவில் ஆட்டோ ஓட்டுநர் கொலை

சென்னை: மெரினா கடற்​கரை​யில் நொச்​சிக்​குப்​பம் எதிரே உள்ள மணல் பரப்​பில் நேற்று அதி​காலை 35 வயது மதிக்​கத்​தக்க இளைஞர் ஒரு​வர் தலை​யில் வெட்​டுக் காயங்​களு​டன் உயிருக்கு போராடிக் கொண்​டிருந்​தார். அந்த வழி​யாக நடைப்​ப​யிற்​சிக்கு சென்​றவர்​கள் இதுகுறித்து காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தனர்.

தகவல் அறிந்த மெரினா காவல் நிலைய போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்து அந்த இளைஞரை மீட்டு 108 ஆம்​புலன்ஸ் மூலம் ராயப்​பேட்டை அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்​கப்​பட்​டது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 7.30 மணி​யள​வில் அவர் உயி​ரிழந்​தார்.

இக்​கொலை தொடர்​பாக மெரினா போலீ​ஸார் வழக்​குப்பதிவு செய்​துள்​ளனர். போலீ​ஸாரின் விசா​ரணை​யில், அந்த நபர் கீழ்ப்​பாக்​கம் சாஸ்​திரி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்​டுநர் அந்​தோணி (33) எனத் தெரிய​வந்​தது. அந்​தோணிக்கு நொச்​சி குப்​பம் பகு​தி​யில் தோழி ஒரு​வர் இருந்​துள்​ளார். அவருடன் அந்​தோணி நெருக்​கம் காட்​டி​யுள்​ளார்.

சம்​பவத்​தன்று இரவு மது​போதை​யில் கீழ்ப்​பாக்​கத்​திலிருந்து தோழி வீட்​டுக்கு ஆட்டோ ஓட்​டிச் சென்​றுள்​ளார். வள்​ளுவர் கோட்​டம் அருகே வாகன சோதனை​யில் போலீ​ஸார் ஆட்​டோவை பறி​முதல் செய்​ததோடு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து அனுப்​பினர். இதையடுத்​து, அவர் வாடகை ஆட்​டோ​வில் தோழி வீட்​டுக்கு சென்​று, அவருடன் நெருக்​க​மாக இருந்​து​விட்​டு, நள்​ளிர​வான​தால் கடற்​கரை மணற்​பரப்​பிலேயே படுத்​துள்​ளார்.

தாயுட​னான கூடா நட்பை அறிந்த அவரது மகனான கல்​லூரி மாணவர் நண்​பருடன் சென்று அந்​தோணியை கொலை செய்​துள்​ள​தாக முதல் கட்ட தகவல் கிடைத்​துள்​ளது. தலைமறை​வான கொலை​யாளி​கள் பிடிபட்​டால் கொலைக்​கான விரி​வான காரணம் தெரிய​வரும் என போலீ​ஸார் தெரி​வித்​தனர். மேலும் சுற்றுப் பகு​தி​களில் உள்ள சிசிடிவி கேமரா காட்​சிகள் அடிப்​படை​யிலும் போலீ​ஸார் வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x