Published : 08 Nov 2025 07:55 AM
Last Updated : 08 Nov 2025 07:55 AM

20 தூதரகங்களுக்கு குண்டு மிரட்டல்: நடிகர் அருண் விஜய் வீட்டிலும் சோதனை

சென்னை: சென்னையில் உள்ள 20 வெளி​நாட்டு துணை தூதரகங்​களுக்​கும் நடிகர் அருண் விஜய் வீட்டுக்கும் நேற்று வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது. நாடு முழு​வதும் கடந்த சில மாதங்​களாக அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், திரைப் பிரபலங்​கள், பள்​ளி​கள், விமான நிலை​யங்​கள், தூதரகங்​கள் உட்பட பலவற்​றுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் டிஜிபி அலு​வலக இ-மெ​யில் முகவரிக்கு நேற்று காலை மின்​னஞ்​சல் ஒன்று வந்​தது.

அதில், சென்னை ஈக்​காட்​டுத்​தாங்​கலில் உள்ள நடிகர் அருண் விஜய் வீடு, நுங்​கம்​பாக்​கத்​தில் உள்ள இலங்​கை, கிண்​டி​யில் உள்ள பிலிப்​பைன்​ஸ்,ராயப்​பேட்​டை​யில் உள்ள ஆஸ்​திரேலி​யா, நந்​தனத்​தில் உள்ள தாய்​லாந்து உள்​ளிட்ட நாடுகளின் 20 துணைத் தூதரகங்​களில் வெடிகுண்டு வைக்​கப்​பட்​டுள்​ளது என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

பின்​னர் உயர் போலீஸ் அதி​காரி​களின் அறி​வுறுத்​தலை ​அடுத்​து, போலீ​ஸார் வெடிகுண்​டு​களை கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​கள் மற்​றும் மோப்ப நாய்​களு​டன் விரைந்து வெடிகுண்டு மிரட்​டலுக்கு உள்​ளான இடங்​களில் சோதனை நடத்​தினர். பல மணி நேர சோதனைக்​குப் பிறகு சந்​தேகப்​படும்​படி​யான எந்த பொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை. எனவே வதந்​தியை கிளப்​பும் வகை​யில் மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டது. இந்த விவ​காரம் தொடர்​பாக சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x