Published : 07 Nov 2025 06:39 AM
Last Updated : 07 Nov 2025 06:39 AM

விடுதி குளியல் அறையில் கேமரா பொருத்தியதால் இளம்பெண் கைது: தவறான தகவல் கொடுத்து ஆண் நண்பரை தப்பவைத்துள்ளார்

ஓசூர் அருகே கெலமங்கலத்தை அடுத்த லாளிக்கல் கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை விடுதியில் குளியல் அறையில் ரகசிய கேமரா பொருத்திய விவகாரத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் விடுதி வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்கள்.

ஓசூர்: கெலமங்​கலம் அருகே தனி​யார் தொழிற்​சாலை பெண்​கள் விடுதி குளியல் அறை​யில் ரகசிய கேமரா பொருத்​திய விவ​காரத்​தில் கைதான வடமாநிலப் பெண், தவறான தகவலைக் கொடுத்து தனது ஆண் நண்​பரை தப்ப வைத்​தது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. இதையடுத்​து, தலைமறை​வானவரை தேடி போலீ​ஸார் ஜார்க்​கண்ட் மாநிலத்​துக்கு விரைந்​துள்​ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்​டம் கெலமங்​கலம் அருகே நாகமங்​கலத்​தில் உள்ள தனி​யார் தொழிற்​சாலையில் பணிபுரி​யும் பெண் தொழிலா​ளர்​கள் தங்​கு​வதற்​காக லாளிக்​கல் பகு​தி​யில் விடுதி உள்​ளது. இங்கு 6 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் தங்​கி​யிருந்​தனர். இந்​நிலை​யில் கடந்த 1-ம் தேதி விடு​தி​யில் உள்ள ஒரு அறை​யின் குளியல் அறை​யில் ஒடி​சாவைச் சேர்ந்த நீலுகு​மாரி குப்​தா(22) என்ற பெண் தொழிலாளி ரகசிய கேமரா பொருத்​தி​யது தெரிய வந்​தது.

இதுதொடர்​பாக விடுதி காப்​பாளரிடம் சக பெண் தொழிலா​ளர்​கள் கூறிய தகவலின் அடிப்​படை​யில் கேமரா அகற்​றப்​பட்டு, தொழிற்​சாலை அதி​காரி​கள் விசா​ரணை நடத்தினர். பின்னர் நீலுகு​மாரி குப்​தாவைக் கைது செய்​தனர். அவர் கொடுத்த தகவல் அடிப்​படை​யில் பெங்​களூரு​வைச் சேர்ந்த அவரது ஆண் நண்​பர் சந்​தோஷ் என்​பவரை​யும் கைது செய்​தனர்.

இதனிடையே, சந்​தோஷிடம் நடத்​திய விசா​ரணை​யில், அவருக்கு இந்த விவ​காரத்​தில் தொடர்பு இல்லை என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்​து, நீலுகு​மாரி குப்​தா​விடம் மீண்​டும் நடத்​திய விசா​ரணை​யில், ரகசிய கேம​ராவை பொருத்​தச் சொன்​னது பெங்​களூரு​வில் ஓட்​டுந​ராக பணிபுரி​யும் இன்​னொரு ஆண் நண்​ப​ரான ஒடி​சாவைச் சேர்ந்த ரவி பிர​தாப்​சிங் என்​பதும், அவரை தப்ப வைக்க போலீ​ஸாரிடம் தவறான தகவலை நீலுகு​மாரி குப்தா தெரி​வித்​ததும், ரவி பிர​தாப்​சிங் ஜார்​கண்ட் மாநிலத்​துக்கு தப்​பிச் சென்​றதும் தெரிய வந்​தது. இதையடுத்​து, உத்​தனப்​பள்ளி போலீ​ஸார் 5 பேர் நேற்று காலை பெங்​களூரு​விலிருந்து விமானம் மூலம் ஜார்​கண்ட் விரைந்​துள்​ளனர்.

இதனிடையே, நேற்று நண்​பகலில் விடுதி வளாகத்​தில் திரண்ட பெண் தொழிலாளர்​கள், இந்த விவ​காரத்​தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்​ப​தாக​வும், அவர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரியும் தர்​ணா​வில் ஈடு​பட்​டனர். அவர்​களை பாது​காப்பு பணி​யில் இருந்த போலீ​ஸார் மற்​றும் தனி​யார் தொழிற்​சாலை உயர் அதி​காரி​கள் அமை​திப்​படுத்தி அனுப்பி வைத்​தனர்.

இப்​பிரச்​சினை​யால் விடு​தி​யில் தங்​கி​யுள்ள பெண்​கள் பலர், தங்​கள் சொந்த ஊருக்கு திரும்பி வரு​கின்​றனர். நேற்று 80 சதவீதம் பெண்​கள் பணியை புறக்​கணித்து விடு​தி​யில் இருந்​தனர். தனி​யார் தொழிற்​சாலை நிர்​வாகம் சார்​பில் டெல்லி மற்​றும் பெங்​களூரு​விலிருந்து வந்த 10 பேர் கொண்ட சிறப்பு குழு​வினர் விடுதி அறை​களில் ரகசிய கேமரா பொருத்​தப்​பட்​டுள்​ளதா என்​பது குறித்து ஆய்வு செய்​தனர்​.

தனியார் நிறுவனம் விளக்கம்

இதற்கிடையே, தனியார் தொழிற்சாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘எங்கள் விடுதி வளாகத்தில் எங்களுடைய ஊழியர்களில் ஒருவருக்கு நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுத்து, காவல்துறையில் புகார் அளித்தோம். இப் பிரச்சினையை நாங்கள் மிகவும் தீவிரமாகவும் மிகுந்த அக்கறையுடனும் அணுகி வருகிறோம். எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் ஆதரவான சூழலைக் கொண்டிருக்கும் பணியிடத்தை உறுதி செய்யும் எங்கள் முயற்சியில் அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவு நடவடிக்கைகளையும் செயல்படுத்துவதற்கான திட்டங்களைஉறுதியுடன் செயல்படுத்து வோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x