Published : 05 Nov 2025 07:47 AM
Last Updated : 05 Nov 2025 07:47 AM

த்ரிஷா, மணிரத்னம் வீடு உட்பட 8 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னையில் உள்ள டிஜிபி அலு​வல​கத்​துக்கு நேற்று மின்​னஞ்​சல் ஒன்று வந்​தது. அதில், கோபாலபுரத்​தில் உள்ள ஒரு தனி​யார் பள்​ளி, அண்ணா சாலை​யில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம், ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள திரைப்பட இயக்​குநர் மணிரத்​னம் வீடு, ராயப்​பேட்டை சென​டாப் சாலை​யில் உள்ள நடிகை த்ரிஷா வீடு, அண்​ணாநகரில் நடிகர் விஷால் வீடு, வேளச்​சேரி​யில் உள்ள பிரபல வணிக வளாகம், உயர் நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள சிபிஐ நீதி​மன்​றம் உள்​ளிட்ட 8 இடங்​களில் வெடி குண்டு வைக்​கப்​பட்​டிருப்​ப​தாக குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

இதையடுத்து வெடிகுண்​டு கண்​டறிந்து அகற்​றும் நிபுணர்​களும், போலீ​ஸாரும் அங்கு சென்று சோதனை நடத்​தினர். பல மணி நேரம் நடைபெற்ற சோதனை​யில், அங்​கிருந்து எந்த வெடி பொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட​வில்​லை. இதனால் அந்த மின்​னஞ்​சல், வதந்​தியை பரப்​பும் நோக்​கத்​தில் வந்​திருப்​பது தெரிய​வந்​தது.

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர். சென்னை மட்​டும் அல்​லாமல் தமிழகம் முழு​வதும் அண்​மைக் கால​மாக வதந்​தியை கிளப்​பும் வகை​யில் இது​போன்று தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்டு வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x