Published : 03 Nov 2025 08:46 AM
Last Updated : 03 Nov 2025 08:46 AM

விளக்கை அணைக்க சொன்ன நிறுவன மேலாளர் கொலை: பெங்களூருவில் சக ஊழியர் கைது

பெங்​களூரு: கர்​நாடக மாநிலம் மேற்கு பெங்​களூரு​வின் கோவிந்​த​ராஜ் நகரில் எம்சி லே அவுட் அரு​கில், அடிஜிட்​டல் வால்ட் அண்ட் போட்டோ எடிட்​டிங் நிறு​வனம் செயல்​படு​கிறது.

இங்கு சித்​ரதுர்கா பகு​தியை சேர்ந்த பீமேஷ் பாபு (41) என்​பவர் மேலா​ள​ராக பணி​யாற்றி வந்​தார். இந்​நிறு​வனத்​தில் ஆந்​தி​ராவை சேர்ந்த சோமலா வம்சி (24) என்ற இளைஞர் தொழில்​நுட்ப நிர்​வாகி​யாக பணி​யாற்றி வரு​கிறார். இவர் கடந்த சனிக்​கிழமை நள்​ளிரவு நிறு​வனத்​தில் பணி​யில் இருந்​துள்​ளார்.

அப்​போது பீமேஷ் பாபு வந்​து, தேவைப்​ப​டாத இடங்​களில் மின் விளக்​கு​கள் எரிவதைப் பார்த்​துள்​ளார். அவற்றை அணைக்​கும்​படி வம்​சி​யிடம் கூறி​யுள்​ளார். அப்​போது இரு​வருக்​கும் இடை​யில் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டுள்​ளது.

இதில் ஆத்​திரம் அடைந்த வம்​சி, திடீரென உடற்​ப​யிற்சி செய்​யும் இரும்பு ‘டம்​பல்’ எடுத்து பீமேஷ் பாபு​வின் தலை, முகத்​தில் பல முறை அடித்​துள்​ளார். இதில் அவர் ரத்​தவெள்​ளத்​தில் மயங்கி விழுந்​தார்.

அதை பார்த்து பயந்து போன வம்சி தன்​னுடன் பணிபுரி​யும் கவுரி பிர​சாத் மற்றும் அவரது நண்​பரை துணைக்கு அழைத்தார். பீமேஷ் பாபு பேச்சு மூச்​சின்றி கிடந்​துள்​ளார். உடனடி​யாக ஆம்​புலன்​ஸுக்கு தகவல் தெரி​வித்​துள்​ளனர். சம்பவ இடத்​துக்கு ஆம்​புலன்ஸ் வந்​துள்​ளது. அதில் இருந்த ஊழியர், பாபு ஏற்​கெனவே இறந்​து​விட்​ட​தாக கூறி​யுள்​ளார். இதையடுத்து கோவிந்​த​ராஜ் நகர் காவல் நிலையத்தில் வம்சி சரணடைந்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x