Published : 31 Oct 2025 06:24 AM
Last Updated : 31 Oct 2025 06:24 AM

வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு​ பெற்றுத்தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்த போலி சாமியார் கைது

சீனிவாசன்

ஆவடி: திரு​வள்​ளூர் மாவட்​டம், ஆவடி, நந்​தவனமேட்​டூர் பகு​தியை சேர்ந்​தவர் ஜெக​நாதன் (54). இவருக்​கு, கடந்த மே மாதம் ஆவடி அருகே உள்ள திரு​முல்​லை​வாயல், வைஷ்ணவி நகரில் வசித்து வந்த சீனி​வாசன் என்ற வாசு (32) என்​பவரின் அறி​முகம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து சீனி​வாசன், தனக்கு தமிழ்​நாடு வீட்டு வசதி வாரி​யத்​தில் பணி புரிந்​து​வரும் ஐஏஎஸ் அதி​காரி ஒரு​வர் நெருக்​க​மானவர் எனவும், அவர் மூலம் தமிழ்​நாடு வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்​கீடு​களை பெற்​றுத் தரு​வ​தாக​வும், அதற்​காக ஒரு வீட்​டுக்கு ரூ.80 ஆயிரம் செலுத்த வேண்​டும் எனவும் கூறி​யுள்​ளார்.

இதனை நம்​பிய ஜெக​நாதன், உறவினர்​கள், நண்​பர்​கள் என 17 பேரிடம் ரூ.20 லட்​சத்தை வாங்கி சீனி​வாசனின் வங்​கிக் கணக்கு அனுப்​பி​யுள்​ளார். பணம் அளித்து பல மாதங்​களாகி​யும், வீடு ஒதுக்​கீடு​களை பெற்​றுத் தராமல் சீனி​வாசன் தன்னை ஏமாற்​றியதை உணர்ந்​த ஜெக​நாதன், இதுகுறித்து ஆவடி குற்​றப்​பிரிவு போலீ​ஸாரிடம் புகார் அளித்​தார்.

அதன் பேரில் போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், நவசக்தி பீடம் என்ற பெயரில் அறக்​கட்​டளை நடத்தி வரும் சீனி​வாசன், போலி சாமி​யார் என்​பதும், அவர் ஜெகநாதனை ஏமாற்றி பணம் பெற்​றதும் தெரியவந்தது. இதையடுத்​து,சீனிவாசன் கைது செய்யப்பட்டார். மேலும், முக்​கிய தேசிய கட்​சித் தலை​வரின் பெயரை கூறி, அவர் மூல​மாக தேர்​தலில் எம்​.பி. சீட் வாங்கி தரு​வ​தாக கூறி, சீனிவாசன் ஒரு​வரிடம் ரூ.44 லட்​சம் பெற்​று ஏமாற்​றிய​தாக​வும்​ கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x