Published : 31 Oct 2025 06:25 AM
Last Updated : 31 Oct 2025 06:25 AM

சென்னை | கிரிப்டோ கரன்சி தருவதாக ரூ.26 லட்சம் மோசடி

சென்னை: அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்த பட்​ட​தாரி சேத்​தன் (25). இவர் கிரிப்டோ கரன்சி வாங்க திட்​ட​மிட்​டிருந்​தார். அப்​போது, சேலத்தை சேர்ந்த சக்தி என்​பவரது அறி​முகம் டெலிகி​ராம் மூலம் கிடைத்​தது. அவர் கிரிப்டோ கரன்​சி​யில் முதலீடு செய்​தால் அதிக லாபம் கிடைக்​கும் எனவும், தன்​னிடம் கிரிப்டோ கரன்சி விற்​பனைக்​காக உள்​ளது எனவும் தெரி​வித்​துள்​ளார்.

இந்த தகவலை சேத்​தன் தனது நண்​பர்​கள் வேலப்​பன்​சாவடியைச் சேர்ந்த எல்​ஐசி முகவர் லாரன்​ஸ், மும்​பையைச் சேர்ந்த செந்​தில் குமார் மற்​றும் பெங்​களூரு​வைச் சேர்ந்த கிரண்​கு​மார் ஆகியோரிடம் தெரிவிக்க, அவர்​களும் கிரிப்டோ கரன்சி வாங்க முடிவு செய்​துள்​ளனர். இதையடுத்​து, சக்தி கொடுத்த வங்கி கணக்​குக்கு 3 பேரும் சேர்ந்து ரூ.26.55 லட்​சத்தை அனுப்பி வைத்​துள்​ளனர்.

போலீ​ஸார் விசாரணை: ஆனால், அவர்​களுக்கு அதற்​கான கிரிப்டோ கரன்சி கொடுக்​கப்​பட​வில்​லை. ஏமாற்​றப்​பட்​டதை உணர்ந்த 3 பேரும் காவல் துறை​யில் புகார் தெரி​வித்​தனர். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து வி​சா​ரித்​து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x