Published : 30 Oct 2025 06:37 AM
Last Updated : 30 Oct 2025 06:37 AM

சென்னை | எஸ்.ஐ. பணி பெற்றுத் தருவதாக ரூ.18 லட்சம் மோசடி: போலி பணியாணை வழங்கியவர் கைது

ரஞ்சித்குமார்

சென்னை: ​அரும்​பாக்​கத்​தைச் சேர்ந்​தவர் சீனி​வாசன் (32). எம்​பிஏ பட்​ட​தா​ரி​யான இவர் காவல் துறை​யில் உதவி ஆய்​வாள​ராக (எஸ்​.ஐ.) பணி​யில் சேரும் முயற்​சி​யில் இருந்​தார். இதற்​கான தேர்​வை​யும் எழு​தி​னார். ஆனால் வெற்றி பெற முடிய​வில்​லை. அப்​போது அவருக்கு காஞ்​சிபுரம் மாவட்​டம் நாவலூரைச் சேர்ந்த ரஞ்​சித்​கு​மார் (39) என்​பவரது அறி​முகம் கிடைத்​தது.

அர்ச்​சக​ரான ரஞ்​சித் குமார், தனக்கு அரசு உயர் அதி​காரி​களை நன்கு தெரி​யும் எனவும், தான் நினைத்​தால் அரசு வேலை பெற்​றுத் தர முடி​யும் எனவும் கூறி​னார். இதை நம்​பிய சீனி​வாசன், எஸ்.ஐ. பணி பெற்​றுத் தர கோரிக்கை விடுத்​தார். இதற்கு பணம் தேவைப்​படும் என்று கூறிய​தால் முன்​பண​மாக 2017 முதல் 2023 வரை பல்​வேறு தவணை​களில் ரூ.18 லட்​சம் கொடுத்​தார்.

பணத்தை பெற்​றுக் கொண்ட ரஞ்​சித்​கு​மார் எஸ்ஐ பணி கிடைத்​தது​போல் பணி நியமன ஆணை வழங்​கி​னார். அதை எடுத்​துக் கொண்டு காவல் துறை பணிக்கு சென்​ற​போது​தான் அது போலி ஆணை எனத் தெரிய​வந்​தது. இதுகுறித்து சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் சீனி​வாசன் புகார் அளித்​தார்.

இதையடுத்​து, இந்த விவ​காரம் குறித்து விசா​ரணை நடத்த சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸாருக்கு உத்​தர​விடப்​பட்​டது. அதன்​படி, அப்​பிரிவு போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

இதில் ரஞ்​சித் குமார் மீது அளிக்​கப்​பட்ட புகார் உண்மை எனத் தெரிய​வந்​தது. இதையடுத்து தலைமறை​வாக இருந்த அவரை போலீ​ஸார் திரு​வாரூர் மாவட்​டம், மன்​னார்​குடி​யில் பதுங்கி இருந்​த​போது கைது செய்​தனர். அவரிட​மிருந்து போலி​யான பணி நியமன ஆணை​கள், வங்கி பாஸ் புத்​தகம் மற்​றும் வழக்​குக்கு தொடர்​புடைய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x