Published : 30 Oct 2025 05:57 AM
Last Updated : 30 Oct 2025 05:57 AM

பிரபலங்கள் வீடுகளுக்கு சென்னையில் இந்தாண்டில் 229 வெடிகுண்டு மிரட்டல்: சர்வதேச போலீஸ் உதவியுடன் குற்றவாளியை பிடிக்க நடவடிக்கை

சென்னை: சென்​னை​யில் இந்​தாண்​டில் இது​வரை 229 வெடிகுண்டு மிரட்​டல்​கள் விடுக்​கப்​பட்​டுள்​ளன. இதில் தொடர்​புடைய நபரை கைது செய்ய சர்​வ​தேச போலீ​ஸாரின் உதவி நாடப்​பட்​டுள்​ளது. எப்​போ​தாவது ஒரு​முறை என்ற நிலை மாறி, தின​மும் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கும் நிகழ்​வு​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​கின்​றன.

அது​வும் டிஜிபி அலு​வல​கத்​துக்கே இ-மெ​யில் அனுப்பி பள்​ளி​கள், கல்வி நிறுவனங்​கள், விமான நிலை​யங்​கள், முதல்​வர், எதிர்க்கட்சி தலை​வர், அமைச்​சர்​கள், நடிகர், நடிகைகள், தொழில் அதிபர்​களின் வீடு​களுக்கு வெடிகுண்டு வைத்​துள்​ள​தாக மிரட்​டல் விடுக்​கப்​படு​கிறது.

தலை​மைச் செயல​கம், ஆளுநர் மாளிகை மற்​றும் மத்​திய, மாநில அரசு அலு​வல​கங்​களும் இதற்கு விதி​விலக்​கல்ல. நேற்று அண்ணா சாலை​யில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்​துக்கு மிரட்​டல் வந்​தது. மிரட்​டலை​யடுத்து போலீ​ஸார் வெடிகுண்டு நிபுணர்​கள் மற்​றும் மோப்ப நாய்​களு​டன் விரைந்து சென்று சோதனை மேற்​கொள்​கின்​றனர். இதனால் அவர்​களது உழைப்பு தின​மும் வீணடிக்​கப்​படு​வதோடு, மிரட்​டலுக்கு உள்​ளான இடத்​தில் உள்​ளவர்​கள் அச்​சத்​துக்கு ஆளாகின்​றனர்.

‘டார்க் வெப்’ மூலம் மிரட்டல்: சென்​னை​யில் இந்​தாண்டு இது​வரை​யில் 229 வெடிகுண்டு மிரட்​டல் இ-மெ​யில்​கள் டிஜிபி அலு​வல​கத்​துக்கு வந்​துள்​ளது. அனைத்து மிரட்​டல்​களும் வெளி​நாட்​டில் இருந்​த​வாறு ‘டார்க் வெப்’ என்ற இணை​யத்தை பயன்​படுத்தி அதன் மூலம் விடுக்​கப்​படு​கிறது. இதனால் மிரட்​டல் ஆசாமிகளை அடை​யாளம் காண்​பது போலீ​ஸாருக்கு கடின​மாக உள்​ளது.

இருப்​பினும் சர்​வ​தேச போலீ​ஸார் உதவி​யுடன் வெடிகுண்டு மிரட்​டல் ஆசாமியை கைது செய்ய போலீ​ஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். வெடிகுண்டு மிட்​டலை​யடுத்து சம்பவ இடம் விரைந்து சோதனை நடத்த சென்​னை​யில் வெடிகுண்​டு​களை கண்டறிந்து அகற்​றும் 4 அணி​கள் உள்​ளன. அதோடு மட்​டும் அல்​லாமல் 4 மோப்ப நாய்​களும் உள்ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x