Published : 29 Oct 2025 06:53 AM
Last Updated : 29 Oct 2025 06:53 AM

திரிபுரா மாநில இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாகன ஓட்டுநர் கைது

சிவகுமார்

சென்னை: ​திரிபுரா மாநிலத்​தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் ஒரு​வர் கணவருடன் சென்னை மதுர​வாயலில் வசிக்​கிறார். கடந்த 26-ம் தேதி இவரது வீட்​டுக்கு திரிபு​ராவைச் சேர்ந்த நண்​பர்​கள் சிலர் வந்​தனர். அவர்​களில் ஒரு​வர் முக்​கிய​மான பொருளை மறந்து வைத்​து​விட்டு சென்​று​விட்​டார்.

சிறிது நேரத்​துக்கு பின்​னர் இதை கவனித்த இளம் பெண், ‘அந்த பொருளை உங்​களது வீட்​டுக்கே கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன்’ என நண்​பரிடம் கூறி வாடகை வாகன செயலி மூலம் பதிவு செய்து இருசக்கர வாக​னத்​தில் பள்​ளிக்​கரணை​யில் உள்ள நண்பர் வீட்​டுக்​குச் சென்று பொருளை ஒப்​படைத்​தார்.

பின்​னர் நள்​ளிர​வில் அதே வாடகை வாகன செயலி​யில் அறி​முக​மான அதே இளைஞரின் வாக​னத்​தில் வீடு திரும்​பிக் கொண்​டிருந்​தார். அப்​போது அந்த இளைஞர் வழக்​க​மான வழி​யில் செல்​லாமல் வேறு வழி​யில் இருட்​டான பகு​திக்கு அழைத்​துச் சென்று கத்​தி​முனை​யில் இருசக்கர வாக​னத்​தில் பயணித்த இளம் பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்​தார்.

இது தொடர்​பாக அந்த பெண் வானகரம் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசாரித்தனர். இதில் பாலியல் வன்​கொடுமை​யில் ஈடு​பட்​டது தேனி மாவட்​டம், ஓடைப்​பட்டி பகு​தி​யைச் சேர்ந்த சிவகு​மார் (22) என்​பது தெரிய​வந்​தது. இதையடுத்து அவரை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். பின்​னர்​ அவரை சிறை​யில்​ அடைத்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x