Published : 29 Oct 2025 07:25 AM
Last Updated : 29 Oct 2025 07:25 AM

சென்னை | ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் தொழிலதிபரிடம் ரூ.1.43 கோடி மோசடி: மேலும் 2 பேர் கைது

சென்னை: ஆன்​லைன் வர்த்​தகம் என்ற பெயரில், தொழில் அதிபரிடம் ரூ.1.43 கோடி மோசடி செய்​யப்​பட்ட வழக்​கில், மேலும் இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். பெருங்​குடி​யில் வசிப்​பவர் கார்த்​திக் (36). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர், கடந்த மார்ச் மாதம் சமூக வலை​தளத்​தில் வந்த ஆன்​லைன் வர்த்தக முதலீட்டு விளம்​பரம் ஒன்றை பார்த்​தார்.

அதில், முதலீட்​டுக்கு இரட்​டிப்பு லாபம் பெற்​றுத் தரு​வ​தாக குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. இதை உண்மை என நம்​பிய கார்த்​திக், அவர்​கள் குறிப்​பிட்​டிருந்த செல்​போன் எண்ணை தொடர்பு கொண்​டு அதில் கூறப்பட்ட வாட்ஸ்-ஆப் குழு ஒன்​றில் இணைந்​தார்.

அந்​தக் குழு​வில் மோசடி நபர்​கள் அனுப்​பிய லிங் மூல​மாக முதலீட்டு செயலி ஒன்றை பதி​விறக்​கம் செய்​து, அதில் முதலீடு செய்​யும் பணத்​துக்கு இரட்​டிப்பு லாபம் கிடைக்​கும் என்று மோசடி நபர்​கள் சொன்ன ஆசை வார்த்​தைகளை நம்​பி, அவர்​கள் சொன்​னபடி பல்​வேறு வங்கி கணக்​கு​களுக்கு பல்​வேறு தேதி​களில் ரூ.1.43 கோடி செலுத்​தி​னார்.

அவர் செலுத்​திய பணத்​துக்கு ஏற்​ற​வாறு அதிக லாபம் வந்​தது போல​வும், முதலீடு செய்​யப்​பட்​டது போல​வும் மோசடி பேர்​வழிகள் அந்த செயலி​யில் காட்டியுள்​ளனர்.

அதன்​பின், முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்ற போது, அவர்​கள் வெவ்​வேறு காரணங்​களை கூறி மேலும்பணம் கேட்டு வற்​புறுத்​தினர்.இதனால், ஏமாற்​றப்​பட்டதை உணர்ந்த கார்த்​திக், இது தொடர்​பாக, சென்னை காவல் ஆணை​யரிடம் புகார் அளித்தார்.

இதுகுறித்​து, சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து, ஏற்​றும​தி, இறக்​குமதி நிறு​வனம் நடத்தி வந்த நுங்​கம்​பாக்​கத்​தைச் சேர்ந்த சூர்யா ஸ்ரீனி​வாஸ் (50), முன்​னாள் வங்கி மேலா​ளர் மேற்கு சைதாப் ​பேட்​டையைச் சேர்ந்த சேஷாத்ரி எத்திராஜ் (43) ஆகியோரை கடந்த 23-ம் தேதி கைது செய்​தனர். இந்த வழக்​கில், காஞ்​சிபுரம் மாவட்​டம் அனகாபுத்​தூரைச் சேர்ந்த தினேஷ் (29), திருப்​பத்​தூர் மாவட்​டம், வாணி​யம்​பாடியைச் சேர்ந்த அருண்​பாண்​டியன் (33) ஆகிய மேலும் இரு​வர் நேற்​று முன்​தினம்​ கைது செய்​யப்​பட்​டனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x