Published : 28 Oct 2025 07:10 AM
Last Updated : 28 Oct 2025 07:10 AM

ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்ததால் விரக்தி?- மகனை கொலை செய்த மத்திய அரசு அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

மனைவி, மகனுடன் நவீன் கண்ணன்.

சென்னை: மத்​திய அரசு அதி​காரி தனது மகனை கொலை செய்​து​விட்​டு, ரயில் முன் பாய்ந்து தற்​கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் அவரது மனைவி கழுத்து அறு​பட்ட நிலை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார். சென்னை அண்ணா நகர் மேற்கு 18-வது பிர​தான சாலை​யில் உள்ள அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பில் வசித்து வந்​தவர் நவீன் கண்​ணன் (43).

இவர் தேனாம்​பேட்​டை​யில் உள்ள மத்​திய பாது​காப்​புக்கணக்​கு​கள் அலு​வல​கத்​தில் சீனியர் ஆடிட்​ட​ராக பணி செய்து வந்​தார். தெற்கு ரயில்​வே​யில் அதி​காரி​யாக பணி செய்​யும் மனைவி நிவே​திதா (38), 2-ம் வகுப்பு படித்து வந்த 7 வயது மகன் லவின் கண்ணன் மற்​றும் பெற்​றோருடன் வசித்து வந்​தார்.

இந்​நிலை​யில், நேற்று காலை 10 மணி அள​வில் நிவே​தி​தா​வின் படுக்கை அறையி​லிருந்து அலறல் சத்​தம் கேட்​டது. உடனே பக்கத்து அறையி​லிருந்த நவீன் கண்​ணனின் பெற்​றோர் அங்கு சென்று பார்த்​த​போது மரு​மகள் நிவே​திதா கழுத்து அறுபட்டு ரத்தம் வடிந்த நிலை​யிலும், பேரன் லவின் கண்​ணன் கழுத்து நெறிக்​கப்​பட்டு சடல​மாகக் கிடந்​ததை​யும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்​னர் அக்​கம்பக்​கத்​தினர் உதவி​யுடன் மரு​மகளை மீட்டு கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். தகவலறிந்து வந்த திரு​மங்​கலம் போலீ​ஸார் சிறு​வனின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக அதே மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். நவீன் கண்​ணனின் பெற்​றோர், உதவிக்கு வந்த அக்​கம் பக்​கத்​தினரிடம் போலீ​ஸார் விசா​ரணை மேற்​கொண்​டனர்.

மேலும் கைரேகை நிபுணர்​கள், மோப்ப நாய் வரவழைக்​கப்​பட்டு ஆய்வு செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில் கொரட்​டூர் - வில்லிவாக்கம் இடையே காலை 10.30 மணி​யள​வில், பெங்​களூரு​வில் இருந்து சென்னை சென்ட்​ரல் நோக்கி வந்த சதாப்தி விரைவு ரயில் முன்பு பாய்ந்து நவீன் கண்​ணன் தற்​கொலை செய்து கொண்​டது தெரிய​வந்​தது. ஏற்​கெனவே பேரன் இறந்​து, மரு​மகள் உயிருக்கு ஆபத்​தான நிலை​யில் இருக்​கும்​போது, மகனும் இறந்த செய்தி கேட்டு நவீன் கண்​ணன் பெற்​றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து போலீ​ஸாரிடம் கேட்​ட​போது, “நவீன் கண்​ணனுக்கு ஆன்​லைன் ஷேர் மார்க்​கெட்​டில் பணத்தை முதலீடு செய்து நஷ்டம் ஏற்​பட்​ட​தாக​வும், இதனால் ஏற்​பட்ட விரக்​தி​யில் மகனை கொலை செய்​து​விட்​டு, மனை​வி​யின் கழுத்தை அறுத்​து​விட்​டு, ரயில் முன் பாய்ந்து தற்​கொலை செய்து கொண்​டிருக்க வாய்ப்பு உள்​ள​தாக​வும் தெரி​வித்​தனர். நிவே​தி​தா​விடம் வி​சா​ரித்​தால் இது உண்​மையா என தெரிந்​து​விடும். அவர் தற்​போது பேசும் நிலை​யில் இல்​லை. முழு வி​சா​ரணைக்​குப் பின்​னரே இது உறு​தி செய்யப்படும்​” என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x