Published : 28 Oct 2025 07:10 AM
Last Updated : 28 Oct 2025 07:10 AM

சென்னை | கத்திமுனையில் இளைஞரிடம் வழிப்பறி செய்த 2 ரவுடிகள் கைது

சென்னை: கத்​தி​முனை​யில் இளைஞரிடம் வழிப்​பறி​யில் ஈடு​பட்ட ரவுடிகள் இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். திரு​வொற்​றியூர், பட்டினத்​தார் கோயில் தெரு​வில் வசித்து வருபவர் மேத்யூ (25). இவர் கடந்த 25-ம் தேதி திரு​வொற்​றியூர், மாட்டு மந்தை மேம்​பாலம் வழி​யாக நடந்து சென்று கொண்​டிருந்​தார். அப்​போது அங்கு வந்த 2 நபர்​கள், மேத்​யூவை வழிமறித்து தாக்​கியதோடு கத்​தி​யைக் காட்டி மிரட்டி அவரிட​மிருந்த செல்​போன், பணத்தை பறித்து தப்​பினர்.

இது தொடர்​பாக திரு​வொற்​றியூர் காவல் நிலை​யத்​தில் மேத்​யூ புகாரளித்​தார். அதன்​படி போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டனர். இதில் மேத்​யூ​விடம் வழிப்​பறி​யில் ஈடு​பட்​டது திரு​வொற்​றியூரைச் சேர்ந்த அகில் (31), இம்​ரான் (26) என்​பது தெரிந்​தது. இதையடுத்து அவர்களை போலீ​ஸார் கைது செய்​துனர். பின்​னர் அவர்​களை சிறை​யில் அடைத்​தனர்.

முன்​ன​தாக நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் கைது செய்​யப்​பட்ட அகில் மற்​றும் இம்​ரான் ஆகிய இரு​வரும் திரு​வொற்​றியூர் காவல் நிலைய சரித்​திரப் பதிவேடு குற்​ற​வாளி​கள் என்​பதும், அகில் மீது ஏற்​கெனவே 11 குற்ற வழக்​கு​களும், இம்​ரான் மீது 9 குற்றவழக்​கு​களும் உள்ளது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x