Published : 25 Oct 2025 09:12 AM
Last Updated : 25 Oct 2025 09:12 AM
புதுடெல்லி: தாய்லாந்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை 2 இந்திய பயணிகள் டெல்லி விமான நிலையம் வந்தனர்.
அவர்களது தனிப்பட்ட உடைமைகள் எக்ஸ்ரே மூலம் ஸ்கேன் செய்யப்பட்டன. இதையடுத்து நடைபெற்ற சோதனையில் 4 பாலிதீன் பைகளில் அவர்கள் 7,213 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
சுமார் ரூ.7.21 கோடி மதிப்புடைய அந்த போதைப் பொருளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இரு பயணிகளும் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT