Published : 24 Oct 2025 08:10 AM
Last Updated : 24 Oct 2025 08:10 AM

வீட்டில் வெடி மருந்துகள் பதுக்கிய விவகாரம்: ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று அபுபக்கர் சித்திக்கிடம் என்ஐஏ விசாரணை

சென்னை: வீட்​டில் வெடி மருந்​துகள் பதுக்கி வைத்த விவ​காரத்​தில் தீவிர​வாதி அபுபக்​கர் சித்​திக்கை ஆந்​தி​ரா​வுக்கு அழைத்​துச் சென்று என்ஐஏ அதி​காரி​கள் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். தமிழகத்​தில் நிகழ்ந்த பல்​வேறு தீவிர​வாதச் செயல்​களுக்கு மூளை​யாக செயல்​பட்​ட​வர் அபுபக்​கர் சித்​திக்.

30 ஆண்​டு​களாக தலைமறை​வாக இருந்த இவரை தமிழக தீவிர​வாத தடுப்பு பிரிவு போலீ​ஸார் கடந்த ஜூலை​யில் ஆந்​திராவில் கைது செய்​து புழல் சிறையில் அடைத்தனர். அவர் பதுங்கி இருந்த வீட்​டில் வெடி​பொருட்​களும் கண்​டெடுக்​கப்​பட்​டன.

பாஜக மூத்த தலை​வர் அத்​வானி ரத யாத்​திரை​யின் ​போது மதுரை திரு​மங்​கலத்தில் பைப் வெடிகுண்டு வைத்​தது, பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் கொலை உட்பட பல வழக்​கு​களி​லும் அபுபக்​கருக்கு தொடர்பு இருப்​பது தெரிய​வந்​தது. இதுதொடர்​பாக என்ஐஏ அதி​காரி​கள் அவரை அடுத்​தடுத்து காவலில் எடுத்து விசா​ரித்​தனர்.

7 நாள் காவல்: இந்​நிலை​யில், அபுபக்​கர் சித்​திக்கை தமிழக போலீ​ஸார் கைது செய்து சென்னை அழைத்து வந்​த​போது, ஆந்​தி​ரா​வில் அவர் தங்கி இருந்த வீட்​டில் இருந்து சுமார் 30 கிலோ வெடி மருந்​துகள், மின்​னணு கருவி​களை ஆந்​திர போலீ​ஸார் கைப்​பற்​றினர். இதுதொடர்​பாக அவர்​கள் தனி​யாக வழக்கு பதிவு செய்​திருந்​தனர்.

இதுகுறித்து விசா​ரிப்​ப​தற்​காக சென்னை வந்த என்ஐஏ அதி​காரி​கள் அவரை 7 நாள் காவலில் எடுத்​துள்​ளனர். புழல் சிறை​யில் இருந்து அவரை பலத்த பாது​காப்​புடன் ஆந்​தி​ரா​வுக்கு அழைத்​துச் சென்று விசாரணை நடத்தி வருகின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x