Published : 24 Oct 2025 07:40 AM
Last Updated : 24 Oct 2025 07:40 AM

சென்னை | தடை செய்​யப்​பட்ட மாஞ்சா நூல் பட்​டம் பறக்க விட்ட 5 பேர் கைது

சென்னை: மாஞ்சா நூல் பயன்​படுத்தி தயாரிக்​கப்​படும் பட்​டங்​கள் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதால் மாஞ்சா நூல் பட்​டம் தயா ரிப்​ப​தற்​கும், விற்​ப​தற்​கும் சென்னை காவல்​துறை தடை விதித்​துள்​ளது. இந்​நிலை​யில், வண்​ணாரப்​பேட்​டை, ராமானுஜம் தெரு​விலுள்ள வீட்​டின் மொட்டை மாடி​யில் சிலர் தடை செய்​யப்​பட்ட மாஞ்சா நூல் பட்​டம் விடு​வ​தாக புது​வண்​ணாரப்​பேட்டை போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, போலீ​ஸார் அங்கு சென்று கண்​காணித்​தனர். அப்​போது, அங்கு மாஞ்சா நூல் பயன்​படுத்​தி, பட்​டம் பறக்​க​விட்​டுக் கொண்​டிருந்த தண்​டை​யார்​பேட்டையை சேர்ந்த அன்​பழகன் (23), குமர​வேல் (31), புது​வண்​ணாரப்​பேட்டை சலீம் (41) ஆகிய 3 பேரை கைது செய்​தனர். இவர்​களிட​மிருந்து 4 பட்​டங்​கள், 2 மாஞ்சா நூல்​கண்​டு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன.

இதே​போல், புது​வண்​ணாரப்​பேட்​டை, அம்​மணி அம்​மன் தோட்​டம் பகு​தி​யில் மாஞ்சா நூலி​னால் ஆன பட்​டத்தை பறக்​க​விட்​டுக் கொண்​டிருந்த தண்​டை​யார்​பேட்டை வெற்​றிவேல் (24), புது வண்​ணாரப்​பேட்டை சதீஷ் (24) ஆகிய மேலும் இரு​வரை போலீ​ஸார் கைது செய்​தனர். அவர்​களிட​மிருந்து 10 பட்​டங்​கள், 2 மாஞ்சா நூல்​கண்​டு​கள்​ பறிமுதல் செய்யப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x