Published : 24 Oct 2025 05:43 AM
Last Updated : 24 Oct 2025 05:43 AM

காரைக்கால் | பள்ளி மாணவர் கொலை: சக மாணவியின் தாய்க்கு ஆயுள் சிறை

சகாயராணி விக்டோரியா, பாலமணிகண்டன்

காரைக்கால்: படிப்​பில் ஏற்​பட்ட போட்டி காரண​மாக தனது மகளு​டன் பயின்ற சக மாணவருக்கு குளிர்​பானத்​தில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற பெண்​ணுக்கு ஆயுள் சிறை தண்​டனை வழங்கி காரைக்​கால் மாவட்ட நீதி​மன்​றம் நேற்று தீர்ப்​பளித்​தது.

காரைக்​கால் நேரு நகர் வீட்​டு​வசதி வாரியக் குடி​யிருப்​பைச் சேர்ந்த தம்​பதி ராஜேந்​திரன்​(48)- மால​தி(40). இவர்​களது மகன் பாலமணி​கண்​டன்​(13). நேரு நகரில் உள்ள தனி​யார் பள்​ளி​யில் 8-ம் வகுப்பு படித்து வந்​தார். படிப்​பு, விளை​யாட்​டு, கலை நிகழ்ச்​சிகள் போன்​றவற்​றில் பாலமணி​கண்​டன் முதன்​மை​யாக இருந்​துள்​ளார்.

இந்​நிலை​யில், 2022 செப். 2-ம் தேதி நடை​பெற்ற பள்ளி ஆண்டு விழா ஒத்​தி​கை​யில் பங்​கேற்​று​விட்டு வீடு திரும்​பிய பாலமணி​கண்​ட​னுக்கு வாந்​தி, மயக்​கம் ஏற்​பட்​டது. அப்​போது பெற்​றோர் விசா​ரித்​த​தில், உறவினர் கொடுத்து அனுப்​பிய​தாக பள்​ளிக் காவலாளி கொடுத்த குளிர்​பானத்தை பரு​கிய​தில் இருந்து வாந்தி ஏற்​பட்டு வரு​வ​தாக பாலமணி​கண்​டன் கூறி​யுள்​ளார்.

இதையடுத்​து, அவரை காரைக்​கால் அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்த்​து​விட்​டு, பள்​ளிக்​குச் சென்று விசா​ரித்​தனர். சிசிடிவி கேமரா பதிவு​களை ஆய்வு செய்​த​போது, பால மணி​கண்​ட​னுடன் படிக்​கும் சக மாண​வி​யின் தாயான, காரைக்​காலைச் சேர்ந்த சகாய​ராணி விக்​டோரி​யா(46), பால மணி​கண்​டனின் உறவினர் கொடுத்​த​தாகக் கூறி, பள்​ளிக் காவலாளி தேவ​தாஸிடம் குளிர்​பானம் வழங்​கிச் செல்​வது தெரிய​வந்​தது. இதனிடையே, மருத்​து​வ​மனை​யில் செப். 3-ம் தேதி இரவு பாலமணி​கண்​டன் உயி​ரிழந்​தார்.

இது தொடர்​பாக காரைக்​கால் நகர போலீ​ஸார் மேற்​கொண்ட விசா​ரணை​யில், பாலமணி​கண்​ட​னுக்​கும், சக மாணவி ஒருவருக்​கும் வகுப்​பில் போட்டி இருந்​ததும், இதனால் பாலமணி​கண்​டன் மீது மாணவியின் தாய் சகாய​ராணி விக்​டோரியா தொடர்ந்து மோதல் போக்​கைக் கடைபிடித்து வந்​ததும், கலை நிகழ்​சி​யில் பாலமணி​கண்​டனை பங்​கேற்​க​வி​டா​மல் தடுக்​கும் நோக்​கில் விஷம் கலந்த குளிர்​பானத்தை சகாய​ராணி விக்​டோரியா வழங்​கியதும் தெரிய​வந்​தது.

இதையடுத்​து, சகாய​ராணி விக்​டோரி​யாவை போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். இது தொடர்​பான வழக்கு காரைக்​கால் மாவட்ட அமர்வு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றது. வழக்கை விசா​ரித்த நீதிபதி ஆர்​.மோகன், குற்​றம்​சாட்​டப்​பட்ட சகாய​ராணி விக்​டோரி​யா​வுக்கு ஆயுள் சிறை தண்​டனை​யும், ரூ.20 ஆயிரம் அபராத​மும் விதித்து நேற்று தீர்ப்​பளித்​தார். இவ்​வழக்​கில் அரசு சார்​பில் வழக்​கறிஞர் செல்​வ​முத்​துக்​குமரன் ஆஜா​ரா​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x