Published : 22 Oct 2025 06:55 AM
Last Updated : 22 Oct 2025 06:55 AM

கும்மிடிப்பூண்டி | மனைவியை கொன்று புதைத்த கணவர் கைது

பிரியா

கும்மிடிப்பூண்டி: கும்​மிடிப்​பூண்டி அருகே பெண் கொலை செய்​யப்​பட்​டு, பிளாஸ்​டிக் பேரலில் அடைத்​து, பள்​ளம் தோண்டி புதைக்​கப்​பட்ட சம்​பவம் பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

இதுதொடர்​பாக கொலை செய்​யப்​பட்ட பெண்​ணின் கணவரை நேற்று போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். திரு​வள்​ளூர் மாவட்​டம், கும்​மிடிப்​பூண்டி அருகே உள்ள எளாவூரை அடுத்த துராபள்​ளம் கிராமத்​தைச் சேர்ந்த சிலம்​பரசன் (39). பெயிண்​டர். இவரது மனைவி பிரியா (26). இத்​தம்​ப​திக்கு 6 மற்​றும் 7 வயதுகளில் இரு மகன்​கள் உள்​ளனர்.

இந்​நிலை​யில், மனைவி பிரி​யா​வின் நடத்​தை​யின் மீது சந்​தேகமடைந்த சிலம்​பரசன் அடிக்​கடி அவரிடம் தகராறில் ஈடு​படு​வதும், இதனால், கணவரிடம் கோபித்​துக் கொண்டு தாய் வீட்​டுக்கு பிரியா செல்​வதும் வழக்​க​மாக இருந்து வந்​துள்​ளது.

இந்​நிலை​யில், ஆரணி அருகே உள்ள புது​பாளை​யம் கிராமத்​தைச் சேர்ந்த பிரி​யா​வின் குடும்​பத்​தினர், தீபாவளி பண்​டிகையை முன்​னிட்​டு, பிரி​யாவை சந்​திக்க நேற்று முன் தினம் சிலம்​பரசன் வீட்​டுக்கு வந்​துள்​ளனர். அப்​போது, சிலம்​பரசன், பிரியா இரு மாதங்​களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடி​விட்​ட​தாக தெரித்​துள்​ளார். குழந்​தைகளும் இரு மாதங்​களாக தாய் பிரியாவை காண​வில்லை என, தெரி​வித்​துள்​ளனர்.

இதனால், சந்​தேகமடைந்த பிரி​யா​வின் தந்தை சீனி​வாசன் (55) அளித்த புகாரின் அடிப்​படை​யில், ஆரம்​பாக்​கம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, முதல் கட்ட விசா​ரணை நடத்​தினர். சிலம்​பரசன், பிரி​யா​வின் நடத்​தை​யின் மீது ஏற்​பட்ட சந்​தேகம் காரண​மாக கடந்த ஆக. 14-ம் தேதி இரவு பிரி​யா​விடம் தகராறில் ஈடு​பட்​டுள்​ளார்.

தகராறு முற்​றிய​தால், பிரி​யா​வின் கழுத்தை நெரித்து கொலை செய்த சிலம்​பரசன், உடலை பிளாஸ்​டிக் பேரலில் அடைத்​து, மோட்​டார் சைக்​கிள் மூலம் எளாவூர் ஏழு கண் பாலம் பகு​திக்கு எடுத்து சென்​று, அங்​குள்ள மயானம் அருகே பள்​ளம் தோண்டி பிரி​யா​வின் உடலை புதைத்​துள்​ளது, விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

இதையடுத்​து, கும்​மிடிப்​பூண்டி வட்​டாட்​சி​யர் சுரேஷ்​பாபு முன்​னிலை​யில், நேற்று எளாவூர் மயானம் அருகே புதைக்​கப்​பட்ட பிரி​யா​வின் உடல் தோண்டி எடுக்​கப்​பட்​டது. திரு​வள்​ளூர் அரசு மருத்​து​வ​மனை மருத்​து​வர்​கள் அருண் கவுதம், சைதன்யா பிரேத பரிசோதனை மேற்​கொண்​டனர். இதையடுத்து போலீ​ஸார்​, சிலம்​பரசனை கைது செய்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x