Published : 19 Oct 2025 09:17 AM
Last Updated : 19 Oct 2025 09:17 AM

தூத்துக்குடியில் ரூ.5 கோடி மதிப்பு சீன பட்டாசுகள் பறிமுதல்: மும்பை தொழிலதிபர்கள் உட்பட 4 பேர் கைது 

சீனாவில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் கடத்தி வரப்பட்ட பட்டாசுகள், கைது செய்யப்பட்டவர்கள்.

தூத்துக்குடி: சீ​னா​வில் இருந்து தூத்​துக்​குடிக்கு கப்​பலில் வந்த ரூ.5 கோடி மதிப்​பிலான சீன பட்​டாசுகள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இது தொடர்​பாக மும்பை தொழில​திபர்​கள் உட்பட 4 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

தீபாவளியை முன்​னிட்டு தடை செய்​யப்​பட்ட சீன பட்​டாசுகள் கடத்​தப்​படு​கிறதா என்று மத்​திய வரு​வாய் புல​னாய்​வுப் பிரிவு அதி​காரி​கள், சுங்​கத் துறை அதி​காரி​கள் ஆகியோர் கண்​காணித்து வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், சீனா​வின் நிங்பே துறை​முகத்​தில் இருந்து தூத்​துக்​குடிக்கு வந்த கப்​பலில், தூத்​துக்​குடியைச் சேர்ந்த ஒரு நிறு​வனத்​துக்கு இரு கன்​டெய்​னர்​கள் வந்​தன. அவற்​றில் இன்​ஜினீயரிங் பொருட்​கள் இருப்​ப​தாக ஆவணங்​களில் குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

மத்​திய வரு​வாய் புல​னாய்வு பிரிவு அதி​காரி​கள் அந்த இரு கன்​டெய்​னர்​களை​யும் திறந்து சோதனை​யிட்​டனர். அப்​போது, தகரம், பிளாஸ்​டிக் போன்ற பொருட்​களை ஒட்​டு​வதற்​குப் பயன்​படும் சிலிக்​கான் பசை போன்​றவை இருந்​தன. அவற்​றுக்கு அடி​யில் இந்​தி​யா​வில் தடை செய்​யப்​பட்ட சீன பட்​டாசுகள் மறைத்து வைக்​கப்​பட்​டிருந்​தன. அவற்​றின் மதிப்பு ரூ.5 கோடி​யாகும்.

சட்​ட​விரோத​மாக சீன பட்​டாசுகள் இறக்​கும​தி​யில் ஈடு​பட்ட தூத்​துக்​குடி திரேஸ்​புரத்தை சேர்ந்த மைக்​கேல் ஜேக்​கப் ஜெயசேகரன், சூசை மாணிக்​கம் ஜெயேந்​திரன், மும்​பையை சேர்ந்த தொழில​திபர்​கள் விகாஷ் பட்​டேஷ்வர் தவுபி, தசரத் மச்​சீந்​தரா கோக்​கரே ஆகிய 4 பேரும் கைது செய்​யப்​பட்​டு, பாளை​யங்​கோட்டை மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர். மேலும், தப்​பியோடிய மும்​பையை சேர்ந்த தொழில​திபர் ஒரு​வரை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x