Last Updated : 17 Oct, 2025 08:38 PM

 

Published : 17 Oct 2025 08:38 PM
Last Updated : 17 Oct 2025 08:38 PM

மடப்புரம் அஜித்குமார் கொலையில் மேலும் ஒரு காவலர் கைது

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மேலும் ஒரு காவலர் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தார். கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் 6-வது குற்றவாளியாக தனிப்படை போலீஸ் வாகன ஓட்டுநர் ராமச்சந்திரனை சேர்த்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், ராமச்சந்திரனை இன்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x