Published : 17 Oct 2025 07:32 AM
Last Updated : 17 Oct 2025 07:32 AM

லாரியில் ரகசியமாக பதுக்கிவைத்து ரூ.2 கோடி கஞ்சா கடத்திய இருவர் கைது

இப்​ராஹிம், மதன் பாபு

சென்னை: ஆந்​தி​ரா​விலிருந்து தமிழகத்​துக்கு கடத்தி வரப்​பட்ட ரூ.2 கோடி மதிப்​புள்ள கஞ்​சாவை, போலீ​ஸார் பறி​முதல் செய்​தனர். பிற மாநிலங்​களில் இருந்து தமிழகத்​துக்கு கஞ்சா கடத்தி வரப்​படு​வ​தாக, மத்​திய போதைப் பொருள் தடுப்பு பிரி​வின் சென்னை மண்டல போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, போலீ​ஸார் சென்​னையை அடுத்த சோழ​வரம், காரனோடை டோல் பிளாசா அருகே சாதாரண உடை​யில் கண்​காணித்​தனர்.

அப்​போது, அந்த வழி​யாக வந்த அசோக் லேலண்ட் வகை பெரிய வாக​னத்தை மடக்கி சோதனை செய்​தனர். ஆனால், வாக​னத்​தில் எந்த பொருட்​களும் இல்​லை. சந்​தேகம் அடைந்த போலீ​ஸார் மீண்​டும் சோதித்தபோது, வாக​னத்​தின் இடையே பெட்டிகளில் 320 கிலோ கஞ்​சா ரகசியமாக பதுக்கி வைக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது.

அதை பறி​முதல் செய்த போலீ​ஸார், கடத்​தலில் ஈடு​பட்ட காஞ்​சிபுரம் மாவட்​டம் கெரு​கம்​பாக்​கத்​தைச் சேர்ந்த அப்​துல் இப்​ராஹிம் (58), திரு​வள்​ளூர் மாவட்​டம் அம்​பத்​தூரைச் சேர்ந்த மதன் பாபு (29) ஆகிய இரு​வரை கைது செய்​தனர். இவர்​கள் ஆந்​தி​ரா​விலிருந்த தமிழகத்​துக்கு கஞ்சா கடத்தி வந்​தது தெரிய வந்​தது.

பின்னணி என்ன? - பறி​முதல் செய்​யப்​பட்ட கஞ்​சா​வின் சர்​வ​தேச மதிப்பு ரூ.2 கோடி என போலீஸ் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. கைது செய்​யப்​பட்ட இரு​வரின் பின்​னணி, மற்​றும் கூட்​டாளி​கள் குறித்து போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x