Published : 15 Oct 2025 06:46 AM
Last Updated : 15 Oct 2025 06:46 AM

காஞ்சிபுரம் | நண்பரை கொலை செய்த வழக்கில் டி.வி. சீரியல் துணை இயக்குநருக்கு ஆயுள்

காஞ்சிபுரம்: ​மாங்​காடு பகு​தி​யில் புத்​தாண்டு கொண்​டாட்​டத்​தின் போது ஏற்​பட்ட மோதலில், நண்​பரை கொலை செய்த டி.​வி. சீரியல் துணை இயக்​குநருக்கு ஆயுள் தண்​டனை விதித்து காஞ்​சிபுரம் நீதி​மன்​றம் தீ்ர்ப்​பளித்​துள்​ளது. சென்னை அருகே உள்ள அய்​யப்​பன்​தாங்​கல் பகு​தி​யைச் சேர்ந்த சீரியல் துணை இயக்​குநர் மணி​கண்​டன். இவர், 2021 புத்​தாண்டு தினத்​தன்​று, தனது நண்​பர்​களான ருத்​ரன், ராம்குமார், உள்ளிட்டோருடன் வீட்​டில் மதுஅருந்திகொண்​டாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, மணி​கண்​ட​னுக்​கும், ருத்​ரனுக்​கும் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டு, அது கைகலப்​பாக மாறியது. ருத்​ரன் தாக்​கிய​தில் காயமடைந்த மணி​கண்​டன், ஆத்​திரத்​தில் சமையலறைக்​குச் சென்று கத்​தியை எடுத்து வந்​து, ருத்​ரனின் மார்​பில் குத்​தி​னார். இதில் அவர் உயி​ரிழந்​தார்.

இதுகுறித்த வழக்கு காஞ்​சிபுரம் மாவட்ட கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் நடைபெற்றது. வழக்கை விசா​ரித்த நீதிபதி எஸ்​.மோக​னகு​மாரி குற்​றம் சாட்​டப்​பட்ட மணி​கண்​ட​னுக்கு ஆயுள் தண்​டனை மற்​றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்​தர​விட்​டார். அபராதம் செலுத்​தத் தவறி​னால், கூடு​தலாக 2 மாதங்​கள் கடுங்​காவல் தண்​டனை அனுபவிக்க வேண்​டும் என்​றும் அவர் தனது உத்​தர​வில்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x