Published : 15 Oct 2025 06:09 AM
Last Updated : 15 Oct 2025 06:09 AM

சென்னை | பிரியாணி கடை உரிமையாளரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 ரவுடிகள் கைது

அபிஷேக், நரேன், பிர​காஷ்

சென்னை: பிரி​யாணிக் கடை உரிமை​யாளரைத் தாக்கி வழிப்​பறி​யில் ஈடு​பட்ட ரவுடிகள் 3 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். சென்னை எம்​ஜிஆர் நகர், புகழேந்தி தெரு​வைச் சேர்ந்​தவர் பிரபு (35). கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்​து​வ​மனை அரு​கில் பிரி​யாணிக் கடை நடத்தி வரு​கிறார். இவர் நேற்று முன்​தினம் காலை கோயம்​பேடு செல்​வதற்​காக கே.கே.நகர், வன்​னியர் தெரு வழி​யாக இருசக்கர வாக​னத்​தில் சென்று கொண்​டிருந்​தார். அப்​போது அங்கு வந்த 3 பேர் கும்​பல் பிரபுவை வழிமறித்து பணம் கேட்​டது.

அவர் கொடுக்க மறுத்​த​தால் அரு​கில் கிடந்த உருட்​டுக் கட்​டை​யால் தாக்​கி, பிரபு​விட​மிருந்த பணத்தை வழிப்​பறி செய்து தப்​பியது. தாக்​குதலில் காயமடைந்த பிரபு கே.கே.நகர் அரசு மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்​றார். பின்​னர் அவர் கே.கே.நகர் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தார். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து அந்த பகு​தி​யில் பொருத்​தப்​பட்​டிருந்த சிசிடிவி கேமரா காட்​சிகள் மூலம் விசா​ரணை நடத்​தினர்.

இதில் பிரபுவை தாக்கி வழிப்​பறி​யில் ஈடு​பட்​டது கே.கே.நகர் 63-வது தெரு​வைச் சேர்ந்த அபிஷேக் (25), போரூர் மதனந்​த​புரத்​தைச் சேர்ந்த நரேன் (25), தேனாம்​பேட்டை திருவிக குடி​யிருப்​பைச் சேர்ந்த பிர​காஷ் (43) என்​பது தெரிந்​தது. இதையடுத்து அந்த 3 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

முன்​ன​தாக நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் கைது செய்​யப்​பட்ட அபிஷேக், நரேன் ஆகிய இரு​வரும் கே.கே.நகர் காவல் நிலைய ரவுடிகள் பட்​டியலில் இருப்​பதும் பிர​காஷ் தேனாம்​பேட்டை காவல் நிலைய ரவுடிகள் பட்​டியலில் இடம் பெற்​றுள்​ளதும் தெரிய​வந்​தது. அதோடு மட்​டும் அல்​லாமல் அபிஷேக், நரேன் மீது தலா 10 குற்ற வழக்​கு​கள், பிர​காஷ் மீது ஏற்​கெனவே 14 குற்ற வழக்​கு​களும் உள்ளன என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x