Published : 14 Oct 2025 10:19 AM
Last Updated : 14 Oct 2025 10:19 AM

கர்வா சவுத் தினத்தில் மாமனார் வீட்டினருக்கு மயக்க மருந்து கொடுத்து ரூ.30 லட்சம் நகையுடன் 12 மணமகள்கள் ஓட்டம்

புதுடெல்லி: கர்வா சவுத் தினத்​தில் மாம​னார் வீட்​டைச் சேர்ந்​தவர்​களுக்கு உணவில் மயக்க மருந்து கலந்​து​கொடுத்து ரூ.30 லட்​சம் மதிப்​புள்ள நகைகளு​டன் 12 மணமகள் ஓடிச் சென்ற விவரம் தெரிய​வந்​துள்​ளது.

கர்வா சவுத் பண்​டிகை தினத்​தில், பெண்​கள் தங்​கள் கணவர்​களின் பாது​காப்பு மற்​றும் நீண்ட ஆயுளுக்​காக சூரிய உதயம் முதல் சந்​திர உதயம் வரை விரதம் இருப்​பர். மாலை நேரத்​தில் அகல் விளக்​கேற்றி சல்​லடை வழி​யாக கணவரின் முகத்​தைப் பார்த்து விரதத்தை பெண்​கள் முடிப்​பர்.

இந்த பண்​டிகை பாரம்​பரிய​மாக நேபாள நாடு, டெல்​லி, ஹரி​யா​னா, ராஜஸ்​தான், பஞ்​சாப், ஜம்​மு, மத்​தி​யபிரதேசம், உத்​தரபிரதேசம், இமாச்​சலப்​பிரதேச மாநிலங்​களில் கொண்​டாடப்​படு​கிறது. இந்​நிலை​யில் உ.பி.​யின் அலிகர் நகரில் மட்​டும் புதி​தாக திரு​மண​மான 12 மணப்​பெண்​கள் வீட்​டில் இருந்த நகைகளை எடுத்​துக் கொண்டு வீட்டை விட்டு மாய​மானது தெரிய​வந்​துள்​ளது.

உத்தர பிரதேசத்​தைச் சேர்ந்​தவர்​கள் தற்​போது பிஹார், ஜார்க்​கண்ட் மாநிலங்​களில் இருந்து பெண் எடுக்​கிறார்​கள். இதற்​காகவே திரு​மணத் தரகர்​கள் ஏராள​மானோர் உள்​ளனர். தரகர்​களுக்கு ஏராள​மான பணம் கொடுத்து தங்​களது பெண்​களை உ.பி.​யில் திரு​மணம் செய்து வைப்​பது தற்​போது நடை​பெற்று வரு​கிறது. இதன்​மூலம் மணமகன் வீட்​டிலிருந்து ரொக்​கம், நகைகள், வெள்​ளிப் பொருட்​களை
திருடி மோசடி செய்​வதும் நடை​பெற்​றது.

இதனிடையே, புனித​மான கர்வா சவுத் தினத்​தில் புதி​தாக திரு​மண​மான பெண்​கள் தங்​களது கணவர்​களை கைவிட்டு பணம், நகை​யுடன் மாய​மானது தெரிய​வந்​துள்​ளது.

அலிகர் நகரிலுள்ள சாஸ்னி போலீஸ் நிலை​யத்​தில் ஏராள​மான பெண்​கள் இது​போன்று செய்​துள்​ளனர். அதாவது திரு​மணம் என்ற பெயரில் மணமகன் வீட்​டுக்கு வந்து அங்​கிருந்த பணம், நகைகளை திருடிக் கொண்டு மாய​மாகும் மோசடி நடை​பெற்று வரு​வது தெரிய​வந்​துள்​ளது.
கடந்த கர்வா சவுத் தினத்​தில் 12 பெண்​கள் இது​போன்று ரூ.30 லட்​சம் நகைகளு​டன் மாய​மாகி​யுள்​ளனர். இதில் பல மணப்​பெண்​கள், தங்​களது மாம​னார் குடும்​பத்​தா​ருக்கு உணவில் மயக்க மருந்​தைக் கலந்து கொடுத்​து​விட்டு தப்​பி​யுள்​ளனர் என்று போலீஸ் அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​தார். சில வீடு​களில் பணம், வெள்​ளிப் பொருட்​களு​டன் அவர்​கள் மாய​மாகி​யுள்​ளனர்.

இவ்​வாறு பெண்​கள் மாய​மான பின்​னர் திரு​மணத் தரகர்​களை தொடர்​பு​கொள்ள முயலும்​போது அவர்​களது செல்​போன் ஸ்விட்ச் ஆஃப் செய்​யப்​பட்ட நிலை​யில் உள்​ளது. மேலும் அவர்​கள் எங்​கிருக்​கிறார்​கள் என்​பதும் தெரிய​வில்​லை.

இதுகுறித்து அலிகர் போலீஸ் உதவி போலீஸ் கண்​காணிப்​பாளர் மயங்க் பதக் கூறும்​போது, “ஏமாற்​றிய மணப்​பெண்​கள் குறித்து எப்​ஐஆர் பதிவு செய்​து வி​சா​ரணை​யைத்​ தொடங்​கி​யுள்​ளோம்​. இதற்​​காக தனிப்​படைகள்​ அமைக்​கப்​பட்​டுள்​ளன. அவர்​களை விரைவில்​ கைது செய்​வோம்​” என்றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x