Published : 14 Oct 2025 08:21 AM
Last Updated : 14 Oct 2025 08:21 AM

தொழிலதிபர் கொலை வழக்கில் துறவி பூஜா கைது

புதுடெல்லி: உ.பி. அலிகரின் பெண் துறவி பூஜா சகுன் பாண்​டே(50) எனும் அன்​னபூர்ணா பார​தி. கல்​லூரி உதவிப் பேராசிரிய​ராகப் பணி​யாற்​றி​னார். பிறகு பணியை விடுத்து துறவறம் பூண்டு ஆசிரமம் நடத்தி வந்​தார். பூஜா​விற்கு நிரஞ்​சன் அகா​டா, மகா மண்​டலேஷ்வர் பட்​டம் அளித்​துள்​ளது. பிறகு இந்து மகா சபா​வில் இணைந்து அதன் பொதுச் செய​லா​ள​ராக​வும் உள்​ளார்.

அலிகரில் துறவி பூஜா நடத்​திய ஆசிரமத்​தின் நிர்​வாகி​யும், நெருங்​கிய சகா​வு​மாக இருந்​தவர் அபிஷேக் குப்​தா. தொழில​திப​ரான இவர், இருசக்கர விற்​பனை நிலை​யம் நடத்தி வந்​தார். இரு​வருக்​கும் இடையி​லான நெருக்​கம் விரோத​மாகி மோதலானது. இச்​சூழலில் அபிஷேக் கடந்த செப்​டம்​பர் 26 -ல் சுட்​டுக் கொல்​லப்​பட்​டார். இக்​கொலை​யைச் செய்த அலிகரின் பிரபல கிரிமினல்​களான பைஸல் மற்​றும் ஆசீப் மறு​நாளே கைது செய்​யப்​பட்​டனர்.

இவர்​களிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் ரூ.3 லட்​சம் பேசி அபிஷேக்கை கொல்ல உத்​தர​விட்​டது துறவி பூஜா மற்​றும் அவரது கணவர் அசோக் பாண்டே எனத் தெரிந்​தது. அசோக் பாண்டே கைதாக, தலைமறை​வான பூஜா குறித்து துப்பு அளிப்​பவருக்கு ரூ.50,000 பரிசை அலிகர் காவல்​ துறை அறி​வித்​திருந்​தது. இந்நிலையில், ராஜஸ்​தானின் ஜெய்ப்​பூரில் இருந்​த பூஜாவை அலிகர் போலீ​ஸார் கைது செய்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x