Published : 13 Oct 2025 07:50 AM
Last Updated : 13 Oct 2025 07:50 AM

சென்னை மாநகராட்சி பள்ளிக்குள் புகுந்து மிக்ஸி, கிரைண்டர் திருடிய 2 பேர் கைது

சென்னை: மாநக​ராட்சி பள்​ளிக்​குள் புகுந்து மிக்​ஸி, கிரைண்​டர் திருடிய 2 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்ளனர். சென்னை ராயப்​பேட்டை பேகம் தெரு​வில் மாநக​ராட்சி நடுநிலைப்​பள்ளி உள்​ளது. காலாண்டு விடு​முறை முடிந்​து, கடந்த 6-ம் தேதி பள்ளி திறக்​கப்​பட்​டது. அப்​போது, பள்​ளி​யின் சமையல் அறை கதவின் பூட்டு உடைக்​கப்​பட்​டு, சமையல் கூடத்​தில் இருந்த மிக்​ஸி, கிரைண்​டர், அலுமினிய டபராக்​கள், தராசுகள் மற்​றும் 4 எடைக் கற்​கள் திருடுபோயிருந்​தது தெரிய​வந்​தது.

இதுகுறித்து பள்​ளி​யின் தலைமை ஆசிரியை மஹ்பூர் ரஹ்​மானி, ஐஸ் அவுஸ் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். புகாரின் பேரில் வழக்​குப்​ப​திவு செய்த போலீ​ஸார், அப்​பகு​தி​யில் பொருத்​தப்​பட்​டிருந்த கண்​காணிப்பு கேம​ரா​வில் பதி​வான காட்​சிகளை வைத்து விசா​ரணை நடத்​தினர்.

அப்​போது, திருட்டு சம்​பவத்​தில் ஈடு​பட்​டது, ராயப்​பேட்டை செல்​லம்​மாள் தோட்​டத்தை சேர்ந்த விக்​னேஷ் (25), முத்​தையா தோட்​டத்தை சேர்ந்த வசந்​தகு​மார் (24) என்​பது தெரிய​வந்​தது. இதை யடுத்து இரு​வரை​யும் கைது செய்த போலீ​ஸார், பள்​ளி​யில் திருடிய மிக்​ஸி, கிரைண்​டர் உள்​ளிட்ட பொருட்​களை பறி​முதல் செய்​தனர். கைது செய்​யப்​பட்ட இரு​வரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x