Published : 13 Oct 2025 06:36 AM
Last Updated : 13 Oct 2025 06:36 AM

ஓசூர் அருகே அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதல்: புதுமாப்பிள்ளை உட்பட 4 பேர் உயிரிழப்பு

மதன்​கு​மார், மணிவண்​ணன், முகிலன், கோகுல்

ஓசூர்: ஓசூர் அருகே அடுத்​தடுத்து 6 வாக​னங்​கள் மோதிய விபத்​தில் கனடா​வில் இருந்து தலை தீபாவளி கொண்​டாட வந்​தவர் உள்ளிட்ட 4 நண்​பர்​கள் உயி​ரிழந்​தனர். கிருஷ்ணகிரி மாவட்​டம் ஓசூர் அடுத்த கோபசந்​திரம் அருகே​ நேற்று அதி​காலை 3.45 மணி அளவில் பெங்​களூரு​வில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற சரக்கு வாக​னம், 2 லாரி​கள், கார் என 4 வாக​னங்​கள் ஒன்​றன் பின் ஒன்​றாக மோதிக்கொண்​டன.

இதனால், இச்​சாலை​யில் வாகன போக்​கு​வரத்து பாதிக்​கப்​பட்ட நிலை​யில், அங்கு நின்ற காரின் பின்​னால், வேக​மாக வந்த லாரி மோதி​யது. இதில் கார் அப்​பளம்​போல நொறுங்​கிய​தில், காரில் இருந்த 4 இளைஞர்​கள் உயி​ரிழந்​தனர். தகவல் அறிந்து அங்கு வந்த அட்கோ போலீ​ஸார், உயி​ரிழந்​தவர்​களின் உடல்​களை மீட்​டு, ஓசூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

விசா​ரணை​யில், உயி​ரிழந்​தவர்​கள் ஈரோட்டை சேர்ந்த மதன்​கு​மார் (27), சேலம் மாவட்​டம் ஓமலூரைச் சேர்ந்த முகிலன் (30), கன்​னங்​குறிச்​சி​யைச் சேர்ந்த கோகுல் (27), காமலாபுரத்​தைச் சேர்ந்த மணிவண்​ணன் (27) என்​பதும், நண்​பர்​களான இவர்​களில் மதன்​கு​மார் கனடா​வில் பணிபுரிந்து வரு​வதும், கடந்த 5 மாதங்​களுக்கு முன்​னர் அவருக்கு திரு​மண​மானதும் தெரிந்​தது.

மேலும், தலை தீபாவளி கொண்​டாட மதன்​கு​மாரின் மனைவி ஏற்​கெனவே கடந்த மாதம் ஈரோட்​டுக்கு வந்த நிலை​யில், கனடா​வில் இருந்து மதன்​கு​மார் நேற்று முன்​தினம் இரவு விமானம் மூலம் பெங்​களூருவு​க்கு வந்​துள்​ளார். அவரை அவரது நண்​பர்​கள் காரில் அழைத்து வந்​த​போது விபத்​தில் சிக்கி உயி​ரிழந்​தது தெரிந்​தது. இதுதொடர்​பாக போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, கர்​நாடக மாநிலம் சித்​திர துர்​காவை சேர்ந்த லாரி ஓட்​டுநர் கிரிஷ் (30) என்​பவரை கைது செய்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x