Published : 10 Oct 2025 07:15 AM
Last Updated : 10 Oct 2025 07:15 AM

சென்னை | போலி ஆவணம் மூலம் ரூ.1.5 கோடி நிலம் அபகரிப்பு: திரையரங்க உரிமையாளர் கைது

சீனி​வாசன், இளஞ்​செழியன்

சென்னை: சமூகநலத் துறை​யில் பணி​யாற்றி ஓய்​வு​பெற்ற பெண் அதி​காரி​யின் ரூ.1.5 கோடி மதிப்​புடைய நிலத்தை போலி ஆவணங்​கள் மூலம் அபகரித்​த​தாக திரையரங்க உரிமை​யாளர் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

சமூகநலத் துறை​யில் இணை இயக்​குந​ராகப் பணி செய்து ஓய்வு பெற்​றவர் மேரி வர்க்​கீஸ் (65). கேரளாவை பூர்​வீக​மாகக் கொண்ட இவர் சென்னை மாதவரத்​தில் வசித்து வரு​கிறார். இவருக்கு கொளத்​தூரில் ரூ.1.5 கோடி மதிப்​புடைய நிலம் இருந்​தது. இதை சிலர் போலி ஆவணங்​கள் மற்​றும் ஆள்​மாறாட்​டம் மூலம் அபகரித்​துள்​ளனர்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் மேரிவர்க்​கீஸ் புகார் தெரி​வித்​தார். இதன்​படி உரிய விசா​ரணை நடத்த சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸாருக்கு காவல் ஆணை​யர் அருண் உத்​தர​விட்​டார். கூடு​தல் காவல் ஆணை​யர் ராதிகா மேற்​பார்​வை​யில் நில மோசடி புல​னாய்​வுப் பிரிவு ஆய்​வாளர் ஆதவன் பாலாஜி விசா​ரணை நடத்​தி​னார்.

இதில் போலி ஆவணங்​கள் மூலம் மேரி வர்​கீஸ் நிலத்தை அபகரித்​தது சென்னை கொளத் ​தூரைச் சேர்ந்த சீனி​வாசன் (64), மணலியைச் சேர்ந்த இளஞ்​செழியன் (50) என்​பது தெரிய​வந்​தது. இவர்​கள் இரு​வரும் உறவினர்​கள் என்​பதும், சீனி​வாசன் கொளத்​தூரில் சொந்​த​ மாகத் திரையரங்​கம் நடத்தி வரு​வதும், இளஞ்​செழியன் ஸ்டீல் கடை நடத்தி வரு​வதும் வி​சாரணையில் தெரியவந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x