Published : 08 Oct 2025 06:29 AM
Last Updated : 08 Oct 2025 06:29 AM

சென்னை | நட்சத்திர ஓட்டலில் இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் கஞ்சா போதை விருந்தில் பங்கேற்ற 18 பேர் கைது

சென்னை: இரவு கொண்​டாட்​டம் என்ற பெயரில் கஞ்சா போதை விருந்​தில் பங்​கேற்ற சினிமா இசையமைப்​பாளர் மகள் உள்​ளிட்ட 18 பேர் கைது செய்​யப்​பட்​டனர். சென்னை கீழ்ப்​பாக்​கம், ஈ.வே.​ரா. சாலை​யில் உள்ள பிரபல நட்​சத்​திர ஓட்​டல் ஒன்​றில் `கஞ்சா' போதை விருந்து நடப்​ப​தாக கீழ்ப்​பாக்​கம் போலீ​ஸாருக்கு ரகசி​யத் தகவல் கிடைத்​தது.

இதையடுத்து போலீ​ஸார் அங்கு சென்று கண்​காணித்​த​போது, ஓட்​டல் அறை​யில் கஞ்சா புகைத்​த​வாறு இளைஞர்​களும், இளம் பெண்​களும் குத்​தாட்​டம் போட்​டுக் கொண்​டிருந்​தனர்.

இதையடுத்​து, அங்கு இருந்த சென்னை மண்​ணடி முகமது இர்​பான் (30), அபிலாஷ் (27), மப்பா (32), அப்​துல் ஹக் (34), பெருங்​களத்​தூர் சக்​திவேல் (36), புளியந்​தோப்பு ஜனார்த் (26), நம்​மாழ்​வார்​பேட்டை கணேஷ் (32), ஏழுகிணறு இப்​ராகிம் (30), பெரியமேடு முகமது சாலிக் (25), கிண்டி ஆகாஷ் (27), மந்​தைவெளி தசரத​ராஜ் (24), சிங்​கப்​பூர் மகமதுபர்​கான் (27), புரசை​வாக்​கம் வினோதன் (30), கொண்​டித்​தோப்பு துளசி​ராமன் (23), விரு​கம்​பாக்​கம் துர்கா பவானி (23), சூளைமேடு ப்ர​வல்​லிகா (23), திரு​வான்​மியூர் ரெஜினா (21) மற்​றும் ஓட்​டல் மேலா​ளர் சைதாப்​பேட்டை சுகு​மார் (43) ஆகிய 18 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

அவர்​களிட​மிருந்து கஞ்​சா, 18 செல்​போன்​கள், 2 இருசக்கர வாக​னங்​கள் மற்​றும் 3 கார்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டன. அவர்​களிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில், அனை​வரும் வாட்​ஸ்​-அப் குழு அமைத்து ஒருங்​கிணைத்து மாதம் 2 முறை போதை விருந்​தில் பங்கேற்றுள்​ளனர். மேலும் கைது செய்​யப்​பட்​ட​வர்​களில் ஒரு​வர் பிரபல திரைப்பட இசையமைப்​பாளர் மகள் என்​பதும்​ போலீ​ஸார்​ விசாரணை​யில்​ தெரியவந்​தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x