Published : 08 Oct 2025 06:52 AM
Last Updated : 08 Oct 2025 06:52 AM

கரூர் நெரிசல் உயி​ரிழப்பு விவ​காரத்​தில் நீதிபதி குறித்து அவதூறு கருத்து: ஓய்வுபெற்ற காவல் அதி​காரி கைது

வரத​ராஜ்

சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்​பவம் தொடர்​பான மனுவை விசா​ரித்த உயர்​நீ​தி​மன்ற நீதிப​தி, நடிகர் விஜய்க்கு கண்​டனம் தெரிவித்தார்.

நீதிப​தி​யின் இந்த கருத்​துக்​கு, தமிழக வெற்​றிக் கழகத்​தைச் சேர்ந்த சிலர் சமூக ஊடகங்​களில் மோச​மாக விமர்​சனம் செய்​தனர். இது தொடர்​பாக, சென்னை தெற்கு மண்டல சைபர் க்ரைம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரித்​தனர். இச்​செயலில் ஈடு​பட்​டது புதுக்​கோட்​டையை சேர்ந்த தவெக நிர்​வாகி கண்​ணன் (25), கிருஷ்ணகிரி மாவட்​டம் பர்​கூரைச் சேர்ந்த தவெக உறுப்​பினர் டேவிட் (25), சென்னை அருகே உள்ள அஸ்​தி​னாபுரத்​தைச் சேர்ந்த அதி​முக தகவல் தொழில்​நுட்ப பிரிவு நிர்​வாகி சசிகு​மார் (48), தூத்​துக்​குடி மாவட்​டம் வேம்​பார் பகு​தி​யைச் சேர்ந்த அந்​தோனி சகாய மைக்​கேல் ராஜ் (37) என்​பது தெரிய வந்​தது. அவர்​கள் 4 பேரை​யும் போலீ​ஸார் கைது செய்​தனர்.

இந்​நிலை​யில், இதே விவ​காரத்​தில் நீதிபதி குறித்து விமர்​சித்து சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளி​யிட்​ட​தாக காவல்​துறை​யின் கைரேகை பிரிவு உதவி ஆணை​ய​ராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற, கோடம்​பாக்​கத்​தில் வசிக்​கும் வரத​ராஜ் என்​பவரை, சென்னை சைபர் க்ரைம் போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். இவர் நேதாஜி மக்​கள் கட்சி என்ற பெயரில் கட்சி ஒன்றை நடத்​தி வரு​கிறார்​ என்​ப​து குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x