Published : 07 Oct 2025 07:14 AM
Last Updated : 07 Oct 2025 07:14 AM

சென்னை | கஞ்சா வழக்கில் பாஜக நிர்வாகி மகன் கைது 

அப்துல் ரகுமான், ரசீத்

சென்னை: கஞ்சா வழக்​கில் பாஜக நிர்​வாகி வேலூர் இப்​ராஹிம் மகன் அப்​துல் ரகு​மான் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல்,விற்​பனையைத் தடுக்கும் வகையில் திரு​மங்​கலம் போலீ​ஸார் பாடி குப்​பம் சாலை​யில் நேற்று ரோந்து பணி​யில் ஈடு​பட்​டிருந்​தனர்.

அப்​போது, அந்​தப் பகு​தி​யில் கார் ஒன்​றின் அருகே 3 பேர் சந்​தேகத்​துக்​கிட​மான முறை​யில் நின்​றிருந்​தனர். அவர்​களிடம் போலீ​ஸார் விசா​ரித்​த​போது முன்​னுக்​குப்​பின் முரணாக பதில் அளித்​தனர். இதையடுத்​து, அவர்​களது காரை போலீ​ஸார் சோதனை செய்​யத் தொடங்​கிய​வுடன், 3 பேரில் ஒரு​வர் ஓட்​டம் பிடித்​தார்.

இதையடுத்​து, மற்ற இரு​வரை​யும் பிடித்து விசா​ரித்​தனர். இதில், பிடிபட்​டது பாஜக சிறு​பான்​மை​யினர் பிரிவு தேசிய செய​லா​ளர் வேலூர் இப்​ராஹிமின் மகன் அப்​துல் ரகு​மான்​(21) மற்​றும் அவரது கார் ஓட்​டுநர் ரசீத்​(25) என்​பது தெரிந்​தது. காரை சோதனை செய்​த​போது, 7 கிராம் கொக்கைன், 20 கிராம் கஞ்சா, கூலிப் பாக்கெட்டுகள் இருந்​தன.

அவற்றையும் அவர்கள் பயன்படுத்திய 4 செல்போன்கள், கஞ்சா அரவை இயந்திரம், கையடக்க எடைக் கருவி ஆகியவற்றையும் போலீ​ஸார் பறி​முதல் செய்து, இரு​வரை​யும் கைது செய்​தனர். தலைமறை​வான அவர்​களது கூட்​டாளியைத் தேடி வரு​கின்​றனர். இவர்​களிடம் போலீ​ஸார் தொடர்ந்து வி​சா​ரணை செய்​து வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x