Published : 04 Oct 2025 06:08 AM
Last Updated : 04 Oct 2025 06:08 AM

சென்னை | வரதட்சணையாக 50 பவுன் நகை கேட்டு திருமணத்தை நிறுத்திய ஐடி ஊழியர் கைது

சென்னை: சென்​னை, முகப்​பேரைச் சேர்ந்த 28 வயது பெண் ஒரு​வருக்கு இன்​ஸ்​டாகி​ராம் மூலம் ஐடி ஊழிய​ரான மேற்கு முகப்​பேரை சேர்ந்த ஆதித்​யன் (31) என்​பவருடன் அறி​முகம் ஏற்​பட்​டது. இதையடுத்து இரு​வரும் காதலித்து வந்துள்ளனர். ஒன்​றரை வருடங்​களாகப் பழகிய நிலை​யில் இரு​வீட்​டாரும் நிச்​ச​யம் செய்​து, வரும் டிச.1-ம் தேதி திரு​மணம் செய்​து​வைக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், கடந்த மாதம் ஆதித்​யன் மற்​றும் அவரது பெற்​றோர் திரு​மணத்​துக்கு 50 பவுன் தங்க நகைகளை வரதட்​சணை​யாக கேட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. அவ்​வளவு நகை போடும் அளவுக்கு வசதி இல்லை எனப் பெண்வீட்​டார் தெரி​வித்​ததையடுத்து மாப்​பிள்ளை வீட்​டார் திரு​மணத்தை நிறுத்​திவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்​ணின் குடும்​பத்​தினர் இந்த விவ​காரம் தொடர்​பாக திரு​மங்​கலம் அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் தெரி​வித்​தனர். அதன்​படி, போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் வரதட்​சணை கேட்டு திரு​மணத்தை நிறுத்​தி​யது தெரிய​வந்​தது. இதையடுத்து ஆதித்​யனை போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​து சிறை​யில்​ அடைத்தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x