Published : 03 Oct 2025 06:38 AM
Last Updated : 03 Oct 2025 06:38 AM

அமெரிக்க தூதரகம், பாஜக அலுவலகம் உட்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்​னை​யில் அமெரிக்​க தூதரகம், பாஜக அலு​வல​கம் உட்பட 4 இடங்​களுக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது.
இந்​தியா முழு​வதும் அண்​மைக் கால​மாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்​டல்​கள் விடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. அண்​மை​யில் கூட பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் பெயரில் உயர் நீதி​மன்​றத்​துக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது. போலீ​ஸாரின் விசா​ரணை​யில், மிரட்​டல் கும்​பல் வெளி​நாட்​டிலிருந்து செயல்​படு​வது தெரிய​வந்​துள்​ளது.

அவர்​களை சர்​வ​தேச போலீ​ஸார் உதவி​யுடன் கைது செய்ய தேவை​யான நடவடிக்​கைகளை எடுத்து வரு​வ​தாக போலீஸ் அதிகாரிகள் தெரி​வித்​தனர். இந்​நிலை​யில் இரு தினங்​களுக்கு முன்பு சென்​னை​யில் உள்ள 9 வெளி​நாட்டு துணை தூதரகங்​களுக்கு மர்ம நபர்​கள் அடுத்​தடுத்து வெடிகுண்டு மிரட்​டல் விடுத்​தனர்.

இதன் தொடர்ச்​சி​யாக டிஜிபி அலு​வல​கத்​துக்கு நேற்று முன்​தினம் இ-மெ​யில் ஒன்று வந்​தது. அதில் சென்னை அண்ணா சாலை​யில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்​தில் வெடிகுண்டு வைத்​துள்​ள​தாக மிரட்​டல் விடுக்​கப்​பட்​டிருந்​தது. இதே​போல், பாஜக அலுவலகம், வடபழனி​யில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோ, நடிகர் எஸ்​.​வி.சேகர் வீட்​டுக்​கும் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது.

தகவலறிந்த போலீ​ஸார் வெடிகுண்டு நிபுணர்​கள் மற்​றும் மோப்ப நாய் உதவி​யுடன், மிரட்​டலுக்கு உள்​ளான 4 இடங்​களுக்​கும் விரைந்து சென்று சோதனை நடத்​தினர். முடி​வில் புரளியைக் கிளப்​பும் வகை​யில் வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டிருந்​தது தெரிய​வந்​தது. இந்த விவ​காரம் குறித்து போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x