Published : 29 Sep 2025 06:06 AM
Last Updated : 29 Sep 2025 06:06 AM

காதல் விவகாரத்தில் கொளத்தூர் இளைஞர் கொலை: உடலை கூவத்தில் வீசிய சிறுவன் உட்பட 3 பேர் கைது

சென்னை: ​காதல் விவ​காரத்​தில் இளைஞரை கத்​தி​யால் குத்தி கொலை செய்து உடலை கூவம் ஆற்​றில் வீசிச் சென்ற சிறு​வன் உள்ளிட்ட 3 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். சென்னை மேத்தா நகர் பாலத்​தின் கீழே கூவம் ஆற்​றில் 25 வயது மதிக்​கத்​தக்க இளைஞர் சடலம் கிடப்​ப​தாக சேத்​துப்​பட்டு போலீ​ஸாருக்கு நேற்று முன்​தினம் தகவல் கிடைத்​தது. உடனே விரைந்து சென்ற போலீ​ஸார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர்.

விசா​ரணை​யில் அந்த இளைஞர் கொளத்​தூரை சேர்ந்த சாய்​நாத்​(24) என்​பதும், அவர் கொலை செய்​யப்​பட்டு இறந்​திருப்​பதும் தெரிய​வந்​தது. இதையடுத்து அப்​பகு​தி​யில் பொருத்​தப்​பட்​டிருந்த கண்​காணிப்பு கேம​ரா​வில் பதி​வான காட்​சிகளை வைத்து விசா​ரணை நடத்​தினர். அதில் சாய்​நாத்தை கொலை செய்​தது, செனாய் நகரைச் சேர்ந்த அன்​பரசன்​(18) மற்​றும் அவரது நண்​பர்​கள் பரத்​(20) மற்​றும் 17 வயது சிறு​வன் என்​பது தெரிய​வந்​தது.

இதையடுத்து அவர்​களை கைதுசெய்த போலீ​ஸார், அவர்​களிடம் நடத்​திய விசா​ரணை குறித்து கூறிய​தாவது: சாய்​நாத்​தும், அன்​பரசனும் நண்​பர்​கள். சாய்​நாத் மீது திருட்​டு, கொலை முயற்சி உள்​ளிட்ட பல்​வேறு வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. இந்​நிலை​யில் அன்​பரசன் வீட்​டுக்கு சாய்​நாத் சென்று வந்​த​போது, அன்​பரசனின் சகோ​தரி​யுடன் பழக்​கம் ஏற்​பட்​டு, இரு​வரும் காதலித்து வந்​துள்​ளனர். காதல் விவ​காரம் அன்​பரசனுக்கு தெரிய வந்​ததையடுத்​து, இரு​வரை​யும் அன்​பரசன் கண்​டித்​துள்​ளார். இருப்​பினும் இவர்​கள் அடிக்​கடி சந்​தித்து வந்​துள்​ளனர்.

இதனால் ஆத்​திரமடைந்த அன்​பரசன் தனது நண்​பர்​களான பரத் மற்​றும் 17 வயது சிறு​வனுடன் சேர்ந்​து, கடந்த 26-ம் தேதி சாய்​நாத்தை தனி​யாக அழைத்​துச் சென்று மிரட்​டினர். அப்​போது, ஏற்​பட்ட தகராறில் அன்​பரசன், தனது நண்​பர்​களு​டன் சேர்ந்து கத்​தி​யால் குத்தி சாய்​நாத்தை கொலை செய்​து, கூவம் ஆற்​றில் வீசிச் சென்​றுள்​ளார்​.
இவ்​வாறு போலீ​ஸார்​ கூறி​னர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x