Published : 28 Sep 2025 01:35 AM
Last Updated : 28 Sep 2025 01:35 AM

ஆற்றில் மணல் திருட்டு: சிறுவன் உட்பட 3 பேர் மீது வழக்கு

கோப்புப் படம்

விருதுநகர்: ​திருச்​சுழி அருகே ஆற்​றில் மணல் திருடியது தொடர்​பாக பொக்​லைன் இயந்​திரத்தை இயக்​கிய 15 வயது சிறு​வன் உட்பட 3 பேர் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர்.

விருதுநகர் மாவட்​டம், திருச்​சுழி - கமுதி சாலை​யில் உள்ள பூமாலைப்​பட்டி பகு​தி​யில் குண்​டாற்​றில் சிலர் மணல் திருடு​வ​தாக வரு​வாய்த் துறை​யினருக்கு தகவல் கிடைத்​தது. அதன்​பேரில், திருச்​சுழி வட்​டாட்​சி​யர் கருப்​ப​சாமி தலை​மை யி​லான வரு​வாய்த் துறை​யினர் அப்​பகு​தி​யில் திடீர் சோதனை நடத்​தினர். அப்​போது, பூமாலைப்​பட்​டி​யில் குண்​டாற்​றில் பொக்​லைன் இயந்​திரம் மூலம் சிலர் மணல் அள்​ளியது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. வரு​வாய்த் துறை​யினர் மற்​றும் போலீ​ஸாரை கண்​டதும், மணல் திருட்​டில் ஈடு​பட்​டோர் டிராக்​டர், பொக்​லைன் வாக​னங்​களை அங்​கேயே விட்​டு​விட்டு தப்​பியோடினர்.

பின்​னர், மணல் அள்​ளப் பயன்​படுத்​திய பொக்​லைன் வாக​னத்​தை​யும், மணல் கடத்​தலுக்​குப் பயன்​படுத்​திய டிராக்​டரை​யும் வரு​வாய்த் துறை​யினர் பறி​முதல் செய்​து, திருச்​சுழி காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​தனர். இது தொடர்​பாக கிராம நிர்​வாக அலு​வலர் அழகர்​சாமி அளித்த புகாரின்​பேரில், டிராக்​டர் உரிமை​யாளர் தங்​கப்​பாண்​டி, ஓட்​டுநர் ராமகிருஷ்ணன் மற்​றும் பொக்​லைன் இயந்​திரத்தை இயக்​கிய 15 வயது சிறு​வன் மீது திருச்​சுழி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, 3 பேரை​யும் தேடி வரு​கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x